Wednesday, 20 April 2016

ஜீவ சமாதிகள்

                                                                        ஜீவ சமாதிகள்



சென்னையில் இருக்கும் ஜீவசமாதிகளின் பட்டியலும்,இருப்பிடமும்

திருவொற்றியூர்: பட்டினத்தார்= கடற்கரையை ஒட்டி பட்டினத்தார் கோவில் வீதி.ஆவணி மாதத்தில் வரும் உத்ராடம் நட்சத்திரத்தன்று வருடாந்திர குருபூஜை.

பாடகச்சேரி ராமலிங்கசாமிகள்= பட்டினத்தார் கோவில் வீதியில் இவரது பெயருள்ள மடம்
ஐகோர்ட் சாமி என்ற அப்புடுசாமி= பாடகச்சேரி ராமலிங்க சாமிகள் மடத்துள் இருக்கிறது.
அருள்மிகு யோகீஸ்வரர் சாமி=வடிவுடையம்மன் கோவில் அருகில் தட்சிணாமூர்த்தி ஆலயம் ஸ்தாபித்தவர்.
பரஞ்சோதி மகான்= டோல்கேட் பஸ் ஸ்டாப் அருகில் 4,தங்கம் மாளிகை அருகில்.
ஞானப்பிரகாச சாமிகள்= வடக்கு மாடவீதி 145/30 இல் சிவாமிர்த ஞான ஆசிரமத்தில் பஞ்சலோக சிலை பிரதிஷ்டை.
மவுன குரு சாமிகள்= கடற்கரையோரம் சமாதி கோவில்.
முத்துக்கிருஷ்ண பிரம்மம்=ஆஞ்சநேயர் கோவில் பஸ் ஸ்டாப் அருகில் உள்ள அருணாச்சலேஸ்வரர் கோவில் எதிரே சமாதி; கார்த்திகை மாத சதயம் நட்சத்திரத்தன்று குரு பூஜை;
ஞானசுந்தர பிரம்மம்= முத்துக்கிருஷ்ண பிரம்மம் சமாதி அருகில் ஞான சுந்தர பிரம்மம் சமாதி.சித்திரை மாத உத்திராடம் நட்சத்திரத்தன்று வருடாந்திர குருபூஜை!!

ராயபுரம்:குணங்குடி மஸ்தான் சாயபு= காய்கறி மார்க்கெட் பின்புறம் பிச்சாண்டி தெருவில் உள்ளது.
ஞானமாணிக்கவாசக சிவாச்சாரியார் சித்தர்= மன்னார்சாமி கோவில் தெரு பழைய பாலம் இறக்கத்தில் உள்ள ருத்ர சோமநாதர் கோவிலில் சமாதி .

வியாசர் பாடி:சிவப்பிரகாச சாமி=இரவீஸ்வரர்-மரகதாம்பாள் கோவிலில் சமாதி கோவில்.
கரபாத்திர சிவப்பிரகாச சாமி=1 வது தெரு சாமியார் தோட்டம் அம்பேத்கர் கல்லூரி அருகில்.பங்குனி உத்திராடம் நட்சத்திரத்தன்று வருடாந்திர குருபூஜை!!

பெரம்பூர்:அந்துகுருநாத சுவாமிகள்=மாதவரம் நெடுஞ்சாலை பிரசன்ன விநாயகர் கோவிலில் சமாதி கோவில்-பஞ்சமுக வடிவமும் உள்ளது.
மதனகோபாலசாமி=மேல்பட்டி பொன்னப்பமுதலி தெரு ஈஸ்வரி கல்யாண மண்டபம் எதிரில் சமாதி கோவில்;
சந்திர யோகி சுவாமி=மங்களபுரம் ஐந்துலைட் அருகில்.
வேர்க்கடலை சுவாமி=அய்யாவு தெரு,திரு.வி.க.நகர்.
மதுரை சாமி=செம்பியம் வீனஸ் தியேட்டர் 2 வது குறுக்குத் தெரு வலது பக்கம் மதுரை சாமி மடத்தில்.
மயிலை நடராஜ சுவாமி=கொளத்தூர்- பெரவள்ளூர் செல்லியம்மன் கோவில் பின்புறம்.

ஓட்டேரி:ஆறுமுகச்சாமி=173/77 டிமலஸ் சாலை,பெரம்பூர் பேரக்ஸ் ரோடு-ஓட்டேரி மயானத்தில் சமாதி கோவில்-உருவப்பட பூஜை.
புரசைவாக்கம்: வீரசுப்பையா சுவாமி= புவனேஸ்வரி தியேட்டர் எதிரில்-52,பெரம்பூர் பேரக்ஸ் ரோடு மடத்தில் சமாதி கோவில்.
ஈசூர் சச்சிதானந்த சாமி=கொசப்பேட்டை சச்சிதானந்தா தெரு(வசந்தி தியேட்டர் அருகில்) சமாதி கோவில்.

எழும்பூர்:மோதி பாபா=422,பாந்தியன் சாலை போலீஸ் கமிஷனர் அலுவலகம் எதிரில் தர்கா.
அனந்த ஆனந்த சுவாமி மற்றும் சபாபதி சுவாமி=பாலியம்மன் கோவில் பின்புறம் சாமியார் தோட்டத்தில் இருவரது சாமதி கோவில்-ஐப்பசி திருவாதிரை நட்சத்திரத்தன்று வருடாந்திர குருபூஜை.

நுங்கம்பாக்கம்:கங்காத சுவாமி=ஹாரிங்டன் ரோடு 5 வது அவென்யூ ஜெயவிநாயகர் கோவிலில் சமாதி.
நாதமுனி சாமி=ஹாரிங்டன் ரோடு,பச்சையப்பன் கல்லூரி பின்வாசல் அருகில் நாதமுனி மடத்தில் சமாதி கோவில்.
பன்றிமலை சாமி=5,வில்லேஜ் ரோட்டில் ஓம்நமச்சிவாயஎன்ற பெயரில் ஆஸ்ரமத்தில் சமாதி.
ஆதிசேஷானந்தா=நுங்கம்பாக்கம் காவல் நிலையத்தின் பின்புறம் ஆதிசேஷானந்தா கோவிலில் சமாதி.
வீரமாமுனிவர்=நுங்கம்பாக்கம் புஷ்பா நகர் காவல்நிலையம் எதிரில் அசலத்தம்மன் கோவில்.

கோடம்பாக்கம்: ஸ்ரீபரமஹம்ஸ ஓங்கார சாமி=அசோக் நகர்-சாமியார் மடம் டாக்டர் சுப்பராயன் நமர் சாமியர் மடம் ஞானோதய ஆலயம்-ஸ்ரீபரமஹம்ஸ ஓங்கார சாமிபீடம்.

வடபழனி:அண்ணாசாமி,ரத்தினசாமி,பாக்கியலிங்கசாமிகள்=வடபழனி முருகன் கோவில் உருவாக இந்த மூவரும் காரண கர்த்தாக்கள்.இவர்களது சமாதி கோவில் முருகன் கோவில் பின்புறம் நெற்குன்றம் பாதையில் வள்ளி திருமண மண்டபம் அருகில்.

மைலாப்பூர்:திருவள்ளுவர்-வாசுகி அம்மையார்=லஸ் அருகில் திருவள்ளுவர் கோவிலில்.
அப்பர் சாமிகள்=171,ராயப்பேட்டை ஹைரோடு-சமஸ்க்ருத கல்லூரி எதிரில்,மைலாப்பூர் அப்பர் சாமிகள் சமாதி உள்ளது.
குழந்தைவேல் சுவாமி=சித்திரகுளம் எஸ்.டி.பி.கில்டு பில்டிங்கில் இருக்கிறது.
முத்தையா சாமிகள்=குழந்தைவேல் சாமிகள் சீடர்-அவரது சமாதி அருகில்.

ஆலந்தூர்:தாடிக்கார சுவாமி=ஆலந்தூர் ஈ.பி.அலுவலகம் தாடிக்காரசாமி தெரு-பழைய எண்:23-24 இடையே சந்து.உள்ளே தாடிக்கார சாமியின் சிறிய ஜீவ சமாதி கோவில்.சிவலிங்க பிரதிஷ்டை.
குழந்தைவேல பரதேசி=ஆலந்தூர் ஈ.பி.அலுவலகம் பின்புறம் 53,சவுரித்தெரு,எஸ்.ஆர்.மெட்ரிக் மேல்நிலைப் பள்ளி வாயிலுக்குக் கீழ்ப்புறம் சமாதி கோவில்.

கிண்டி:சாங்கு சித்தர் சிவலிங்க நாயனார்=எம்.கே.என்.ரோடு 36 ஆம் எண்-சாங்கு சித்தர் சிவலிங்கநாயனார் சமாதி கோவில்-சிவலிங்க பிரதிஷ்டை.இத்துடன் இவரது சீடர்கள் ஸ்ரீகொல்லாபுரி சாமி,ஸ்ரீஏழுமலை சாமிகளின் சமாதி,ஆனி மாத பவுர்ணமியன்று வருடாந்திர குருபூஜை.
சத்யானந்தா கோழீபீ சித்தர்=பஸ் ஸ்டாப் அருகில் உள்ள சாய்பாபா கோவில் வளாகத்தில்.

திருவான்மியூர்:பாம்பன் சுவாமிகள்-கலா சேத்ரா அருகில் திருமட வளாகத்துள் ஸ்ரீபாம்பன் சுவாமிகள் சமாதி ஆலயம்.ஸ்ரீமுருகக்கடவுள் பிரதிஷ்டை.
வால்மீகி=மருந்தீஸ்வரர் கோவில் எதிரில் சிறிய கோவில்.
சர்க்கரை அம்மாள்=75,கலா சேத்ரா ரோடு,

வேளச்சேரி:சிதம்பரச்சாமி என்ற பெரியசாமி=காந்தி சாலை திருப்பம்-1,வேளச்சேரி மெயின் ரோடு-சிவலிங்க பிரதிஷ்டை.

ராஜகீழ்ப்பாக்கம்:சச்சிதானந்த சற்குரு சாமிகள்=அகண்ட பரிபூரண சச்சிதானந்த சபையின் சமாதி.

பெருங்குடி:நாகமணி அடிகளார்=கந்தன் சாவடி பஸ்ஸ்டாப் நாகமணி அடிகளார் சாலை அம்மன் கோவிலுகுள்.

நங்கநல்லூர்:மோனாம்பிகை-ஞானாம்பிகை- சாதுராம்
இம்மூவரின் சமாதி பிளாட் 21,பொங்கி மடம்(மாடர்ன் உயர்நிலைப் பள்ளி அருகில்)-ஸ்டேட் பாங்க் காலனி

சிட்லப்பாக்கம்:சாயி விபூதி பாவா= 83,முதல் மெயின் ரோடு,ஹெச்.சி.நகர்-சிட்லப்பாக்கம் பாலம் இறக்கத்தில் சமாதி கோவில்-அருகில் குமரன் குன்றம் மலைக்கோவில்.

தாம்பரம்: எதிராஜ ராஜயோகி-ஊரப்பாகம் அருகில் கரணை புதுச்சேரியில் இவரது சமாதி கோவில் இருக்கிறது.

படப்பை:துர்கை சித்தர்-ஜெயதுர்கா பீடம் கோவில்.
பெருங்களத்தூர்: ஸ்ரீமத் சதானந்தசாமி- ஆலம்பாக்கம் சதானந்தபுரம்- பெருங்களத்தூரில் சமாதி கோவில்.

ஓம்சிவசக்திஓம்
தமிழ்நாட்டில் இருக்கும் சித்தர்பீடங்கள்,துறவிகளின் ஜீவமாதிகளின் பட்டியல் பகுதி-2
பூமியில்  சித்தர்களின் ஆட்சி துவங்கப் போகிறது;சித்தர்கள் பூமியை 72,000 ஆண்டுகளுக்கு ஆளப்போகிறார்.முதலில் கொங்கணவர் 150 ஆண்டுகளுக்கு பூமியை ஆளப்போகிறார்;இவரது ஆட்சி துவங்கியதும்,தமிழ்நாடு ஆன்மீக ரீதியாக சுத்தமாகும் என்று தெரிகிறது;சித்தர்களின் ஆட்சி துவங்கியதற்கு அடையாளமாக தமிழ்நாட்டின் பழமையான கோவில்களில் இருக்கும் குளங்களில் நறுமணம் எப்போதும் பரவிக்கொண்டே இருக்கும்;இதுதான் அடையாளம்.கடந்த 30,40,50 ஆண்டுகளாக நீதி,நேர்மை,தர்மம் மற்றும் நியாயத்துக்காகப் போராடுபவர்கள்,நேர்மையாக வாழ்வதாலேயே அனைத்தையும் இழந்தவர்கள் அனைவரும் சித்தர்களின் ஆட்சிக்காலத்தில் சகல சவுபாக்கியமும் பெற்று வளமோடு வாழப் போகிறார்கள்.அதற்குள் சித்த சக்திகளின் அருளாசியைப் பெற்று,நீதி நியாயத்துக்குக் கட்டுப்பட்டு வாழத்துவங்குவோம்;

விருதுநகரில் இருக்கும் ஜீவ சமாதிகள்

திருப்புகழ் முத்தையா சாமிகள்:விருதுநகர் நகராட்சி பின்புறம் நாராயண மடம் தெரு பிரியும் இடத்தில் திருப்புகழ்சாமி சமாதி கோவில் அமைந்திருக்கிறது.

சாத்தூர்

மாவிலிப்பட்டி சங்குசாமி
சாத்தூரிலிருந்து 25 கி.மீ.தூரத்திலுள்ள மாவிலிப்பட்டியில் சமாதி கோவில் இருக்கிறது.

அருப்புக்கோட்டை

அருப்புக்கோட்டை டூ விருதுநகர் சாலை பாவடித் தோப்பு அருகில் சமாதி கற்கோவிலாக விமானத்துடன் உள்ளது.இங்கு வருடாந்திர குருபூஜை விழா மாசி மாதத்து மகம் நட்சத்திரம் நிற்கும் நாளில்( மாசி பவுர்ணமி) நடைபெற்றுக்கொண்டிருக்கிறது.

தட்சிணாமூர்த்தி சுவாமி

அருப்புக்கோட்டை சொக்கலிங்கபுரம் நேரு மைதானத்திற்கு வடக்கே சமாதி கோவில் இருக்கிறது.இங்கு வருடாந்திர குருபூஜை விழா மார்கழி மாதம் வரும் மிருகசீரிடம் நட்சத்திர நாளன்று நடைபெற்றுவருகிறது.

சுப்பன் ஞானியார்
சொக்கலிங்கபுரம் வடக்குரதவீதி காமாட்சியம்மன் கோவில் பின்புறம் சமாதி கோவில்  இருக்கிறது.வருடாந்திர குருபூஜை விழா பங்குனி மாத புனர்பூசம் நட்சத்திரத்தன்று நடைபெற்றுவருகிறது.

ஆத்மானந்த ராமசாமி
சொக்கலிங்கபுரம் சிவன் கோவில் தெப்பக்குளத்தின் மேற்குக் கரைப்பக்கம் சமாதி கோவில் இருக்கிறது.ஐப்பசி மாதம் வரும் மூலம் நட்சத்திரநாளன்று வருடாந்திர குருபூஜை விழா நடைபெற்றுவருகிறது.

பொன்னம்பல சுவாமி

அருப்புக்கோட்டை பாவடித்தோப்பு அருகில் உள்ள ஆயிரங்கண் மாரியம்மன் கோவிலுக்கு மேற்கே சமாதி கோவில் இருக்கிறது.தை மாதம் முதல் நாள் வருடாந்திர குருபூஜை விழா நடைபெற்றுக்கொண்டிருக்கிறது.

புலியூரான்
புலியூரான் சித்தர்
அருப்புக்கோட்டையில் இருந்து 10 கி.மீ.தூரத்தில் உள்ளது புலியூரான் சமாதி.

கட்டங்குடி
ரெட்டிச்சாமி குமரவேல் மவுனகுருசாமி
அருப்புக்கோட்டையிலிருந்து 15 கி.மீ/தூரத்தில் உள்ள கட்டங்குடியில் சமாதி இருக்கிறது.வருடாந்திர குருபூஜை விழா ஆனிமாத சுவாதி நட்சத்திரத்தன்று நடைபெற்றுவருகிறது.


சிவானந்த ஜோதி

மேற்கிலிருந்து ஊருக்குள் நுழையும்போது சாலைக்கு வடபுறம் முதலில் தென்படும் கோவில் வளாகமே சிவானந்த ஜோதி சித்தர் அதிஷ்டானக் கோவில்.வருடாந்திர குருபூஜை விழா புரட்டாசி மாத பவுர்ணமியன்று நடைபெற்றுவருகிறது.

கோட்டூர்

கோட்டூர் குருசாமி
அருப்புக்கோட்டையிலிருந்து அடிக்கடி பஸ் வசதி உள்ள கோட்டூரில் குருசாமி சுவாமிகளின் சமாதி கோயில் இருக்கிறது.ஆடி மாத மகம் நட்சத்திரத்தன்று வருடாந்திர குருபூஜை விழா நடைபெற்றுவருகிறது.இவரது ஜீவசமாதி ராஜபாளையம் அம்பலபுளிபஜாரின் தெற்கு எல்லையில்,சாலியர் சமுதாயத் தெருவை ஒட்டி அமைந்திருக்கிறது.மிகவும் சக்தி வாய்ந்த ஜீவசமாதி கோயில் இந்த ராஜபாளையம் குருசாமி கோவில் ஆகும்.சுமார் 3000 குடும்பங்களுக்கு இவரே குல தெய்வமாகத் திகழ்ந்துவருகிறார்.

வடக்கு நத்தம்

ஆறுமுகச்சாமி

அருப்புக்கோட்டையிலிருந்து  பஸ் வசதியுள்ள வடக்கு நத்தம் கிராமத்தில் சமாதி கோவில் இருக்கிறது.சமாதி மீது முருகன் பிரதிஷ்டை செய்யப்பட்டுள்ளது.மாதம் தோறும் வரும் கார்த்திகை  நட்சத்திரத்தன்று சிறப்பு வழிபாடு நடந்து வருகிறது.

துத்தி நத்தம்

சிவத்தையா சுவாமி
அருப்புக்கோட்டை சாயல்குடி சாலையில் பரளச்சியை அடுத்து துத்திநத்தம் விலக்கு;இங்கே சிவத்தையா சுவாமிகளின் ஜீவசமாதி இருக்கிறது.

பெருமாள்கோவில்பட்டி
மாசிலானந்த சாமி
அருப்புக்கோட்டை டூ எட்டயபுரம் சாலையில் 18 கி.மீ தூரத்தில் கோடாங்கிபட்டி பஸ் ஸ்டாப்பில் இறங்கவும்.அங்கிருந்து 1 கி.மீ.தூரத்தில் உள்ளது பெருமாள்பட்டி கிராமம்.இந்த கிராமத்தில் மாசிலாந்த சாமியின் ஜீவசமாதி இருக்கிறது.வருடாந்திர குருபூஜை விழா சித்திரை மாதம் வரும் உத்திரம் நட்சத்திரநாளில் நடைபெற்றுவருகிறது.

அழகாபுரி

அருப்புக்கோட்டை டூ எட்டயபுரம் சாலையில் அழகாபுரி கிராமத்தில்(வெம்பூர் அருகில்) சமாதிகோவில் இருக்கிறது.மாசி மாதம் வரும் பவுர்ணமியன்று வருடாந்திர குருபூஜை விழா நடைபெற்றுக்கொண்டிருக்கிறது.


ரெட்டியபட்டி

ரெட்டியப்பட்டி சுவாமிகள்
அருப்புக்கோட்டை டூ விளாத்திகுளம் சாலையில் 31 கி.மீ.தூரத்தில் நாகலாபுரம் இருக்கிறது.அங்கிருந்து 1 கி.மீ.தூரத்தில் கிழக்கே ரெட்டியபட்டி சுவாமிகளின் சமாதி திருக்கோவில் அமைந்திருக்கிறது.
ரெட்டியப்பட்டி லிங்குசாமி திருக்கோவிலும் இங்கே இருக்கிறது.


ராஜபாளையம்

குருசாமி கோவில்
கோட்டூர் குருசாமிகளே இங்கே வந்து குருசாமியாக அருள்பாலித்து வருகிறார்.இந்த கோவிலுக்கு 3000 பூசாரிகள் இருக்கிறார்கள்.குருசாமியை வழிபடுபவர்களின் வம்சத்தைச் சேர்ந்தவர்கள் அனைவரும் வரிசைக்கிரமப்படி பூஜை வைக்க வேண்டும்.ஒருவர் ஒரு முறை பூஜாரியாக  சில நாட்கள் பணிபுரிந்தால்,அவரது பூஜாரி முறை மீண்டும் வர 3 ஆண்டுகள் ஆகும்.இந்த குருசாமி கோவில் சாலியர் சமுதாயத்துக்குச் சொந்தமான  ஜீவசமாதி கோவில் ஆகும்.ஒவ்வொரு கார்த்திகை தினத்தன்றும் சிறப்பு பூஜைகளும்,அன்னதானமும் நடைபெற்றுவருகிறது.தொடர்ந்து 3 நாட்கள் இங்குவந்து வழிபட்டாலே,நமது கடுமையான பண நெருக்கடி தீர்ந்துவிடுகிறது என்பது அனுபவபூர்வமான உண்மை.பல பக்தர்களிடம் குருசாமி இன்றும் நேரில் காட்சி தந்து பேசி வருகிறார்.
பொன்னப்பஞானியார் மற்றும் கருப்பஞானியார்
குருசாமி கோவிலுக்கு நேராகச் செல்லும் தெருவில் ஒரு பர்லாங்கு தூரத்தில் இந்த ஜீவசமாதிகள் அமைந்திருக்கின்றன.கருப்பஞானியார் 60 ஆண்டுகளுக்கு முன்பு ஒரே நாளில்,ஒரே நேரத்தில் ராஜபாளையத்திலும்,வத்ராப் அருகில் இருக்கும் W.புதுப்பட்டியிலும் நேரடியாகப் பேசியிருப்பதைக் கண்டு பலரும் அதிசயப்பட்டிருக்கின்றனர்.

குமராண்டி சுவாமி

ராஜபாளையம் டூ தென்காசி சாலையில் பி.எஸ்.கே.பூங்காவிற்கு வடக்கில் விவேகானந்தர் தெரு முனையில் குமராண்டி சுவாமிகளின் ஜீவசமாதி இருக்கிறது.

திருச்சிற்றம்பல குருநாத சுவாமி
ராஜபாளையம் வடபுறம் திரவுபதி அம்மன் கோவில் தென்புறம் இந்த ஜீவசமாதி அமைந்திருக்கிறது.

கொம்புச்சாமி

ராஜபாளையத்திலிருந்து சத்திரப்பட்டி செல்லும் சாலையில்,சங்கரன்கோவில் திருப்பத்திலிருந்து ஆலங்குளம் மற்றும் சத்திரப்பட்டி செல்லும் சாலையில் கிழக்கே சாலையை ஒட்டி அமைந்திருக்கிறது கொம்புச்சாமி கோவில்.தோப்புப்பட்டி சாலியர் தெருவின் தென்புறத்தில்  அமைந்திருக்கிறது.சித்ராபவுர்ணமியன்று வருடாந்திர குருபூஜை விழா நடைபெற்றுவருகிறது.

பாலத்தடி சுவாமி

ராஜபாளையம் மலையடிப்பட்டி ரோடு அருகில் பாலமரத்தடி சுவாமிகளின் ஜீவசமாதி திருக்கோவில் அமைந்திருக்கிறது.மாசி மாதம் வரும் பூராடம் நட்சத்திர நாளன்று வருடாந்திர குருபூஜை விழா நடைபெற்றுவருகிறது.
சேஷம குருநாத சுவாமி
ராஜபாளையம் வடமேற்குப் பகுதியில் கீழ ஆவரம்பட்டி பாரதியார் தெருவின் கடைசியில் ஸ்ரீ சேஷம குருநாத சுவாமி சமாதி கோவில் இருக்கிறது.வருடாந்திர குருபூஜை கார்த்திகை மாதம் வரும் உத்திராடம் நட்சத்திரத்தன்று நடைபெற்றுவருகிறது.

அருணாச்சலேஸ்வரர்

ராஜபாளையம் அரசுமருத்துவமனை நேர் எதிரில் சாலையில் சிவலிங்க பிரதிஷ்டை செய்யப்பட்டு,அமைந்திருக்கிறது.
ஸ்ரீசத்தியமூர்த்தி சாமிகள்
ராஜபாளையம் அருள் டெக்ஸ்டைல்ஸ் மில்லுக்கு முன்னால் அருள்ஜோதி இல்லம் என்னும் பெயரில்  சுவாமிகளின் ஆசிரமம்.ஆசிரம வளாகத்திற்குள் சமாதி மேடை! வருடாந்திர குருபூஜை வைகாசி மாதம் வரும் பூரம் நட்சத்திரத்தன்று நடைபெற்றுவருகிறது.

கரிவலம் வந்த நல்லூர்
சித்தகல்ப சிரோன்மணி பொன்னையா சுவாமிகள் ஜீவசமாதி இருக்கிறது.

பொதிச்சாமி: கரிவலவந்த நல்லூரில் பஞ்சமூர்த்தி கோவிலாக இருக்கிறது.

சென்னிகுளம்

அண்ணாமலை ரெட்டியார்:கரிவலம் வந்த நல்லூரிலிருந்து 3 கி.மீ.தூரத்திலுள்ள சென்னிகுளத்தில் ஜீவசமாதி இருக்கிறது.

ராஜபாளையம் சத்திரப்பட்டி

சுப்ரமணிய சாமி
ராஜபாளையம் ஆலங்குளம் சாலையில் 10 கி.மீ.தூரத்தில் உள்ளது சத்திரப்பட்டி.மருந்து துணிகள் எனப்படும் பேண்டேஜ் உற்பத்தியில் உலகச் சந்தையைக் கைப்பற்றிவரும் தொழில் கிராமம் இது.இங்கிருக்கும் விநாயகர் ஆரம்பப் பள்ளி அருகில் வேதாந்த மடம் இருக்கிறது.இந்த மடத்தின் வளாகத்திற்குள் சுப்ரமணிய சாமி ஜீவசமாதி இருக்கிறது.வருடாந்திர குருபூஜை விழா புரட்டாசி மாதம் வரும் மிருகசீரிடம் நட்சத்திர நாளன்று நடைபெற்றுவருகிறது.

அருணாச்சல செம்பட்டை ஞானி
சத்திரப்பட்டி அரசு பெண்கள் மேல்நிலைப் பள்ளி முன்புறம் இருக்கிறது.

அயனாவரம்

ஒரு சொல் வாசகன்
ராஜபாளையம் ஆலங்குளம் சாலையில் இருக்கும் சத்திரப்பட்டியை அடுத்து இருக்கும் கிராமம் இது.இங்கு இருக்கும் கண்மாயின் தென்கரையில் ஒரு சொல் வாசகன் சித்தர் பீடம் கிழக்கு பார்த்த சன்னதியில் இருந்து அருள்பாலிக்கிறார்.

ஸ்ரீவில்லிபுத்தூர்

கைலாசசுந்தர சுவாமி
ஸ்ரீவில்லிபுத்தூர் சிவகாசி சாலையில் கனரா வங்கியைக் கடந்ததும் பிரதான சாலையில் இருக்கிறது.சாலியர் சமுதாயத்தின் ஊர் நிர்வாகம் செய்துவருகிறது.

பொன்னாயிரம் சுவாமி
ஊரணிப்பட்டித் தெருவில் இருக்கிறது.வருடாந்திர குருபூஜை விழா மார்கழி மாதத்தில் வரும் சித்திரை நட்சத்திரத்தில் நடைபெற்றுவருகிறது.

ஆறுமுகச்சாமி கோவில்
ஸ்ரீவில்லிபுத்தூர் சிவகாசி சாலையில் கோவிந்தன் நகர் காலனியில் பிரதான சாலையில் வளைவில் அமைந்திருக்கிறது.இங்கு ஆறுமுகச்சாமியும்,பாம்பு தின்னி சாமியும் இருந்து அருள்பாலித்து வருகின்றனர்.இதற்கு எதிரே ஒரு சுடுகாட்டுப்பாதை செல்கிறது.அந்த சுடுகாட்டில் ஒரு ஜீவசமாதி வளாகம் இருக்கிறது.

மூவர் சமாதி என்ற அருள்ஞானிகளின் வளாகம்
மிகவும் சக்திவாய்ந்த இங்கு மதுரை சாமிகள் முதலான 23 மகான்கள் கடந்த ஆயிரம் ஆண்டுகளாக சூட்சுமமாக இருந்து அருள்பாலித்து வருகின்றனர்.

எஸ்.ராமச்சந்திராபுரம்
மதுரை ராஜபாளையம் சாலையில் கலசலிங்கம் பல்கலைக்கழகத்துக்கு அடுத்த 3 வது பஸ் ஸ்டாப் எஸ்.ராமச்சந்திராபுரம் ஆகும்.இங்கே பஸ் நிறுத்தத்திற்கு தெற்கே சதுரகிரியில் 30 ஆண்டுகளாக அன்னதானம் செய்துவரும் காளிமுத்து சுவாமிகளின் ஆசிரமமும்,ஜீவசமாதியும் இருக்கிறது.
இந்த எஸ்.ராமச்சந்திராபுரத்தின் வடக்குத் தெருவுக்கும் ,செங்குளம் கண்மாய்க்கும் நடுவே சடையாண்டி சுவாமிகளின் ஜீவசமாதி அமைந்திருக்கிறது.இவருக்கும்,சதுரகிரிக்கு நெருங்கிய தொடர்பு உண்டு.சுமார் 200 குடும்பங்களுக்கு இவரே குல தெய்வம் ஆவார்.மிகவும் சக்திவாய்ந்த ஜீவசமாதி ஆகும்.


ஓம்சிவசக்திஓம்

தமிழ்நாட்டில் இருக்கும் சித்தர்பீடங்கள்,துறவிகளின் ஜீவசமாதிகளின் இருப்பிடங்கள் பகுதி 3

அனுபவ ரீதியாகப்பார்த்தால், கோவிலுக்குச் சென்று நாம் ஒரு குறிப்பிட்ட பரிகாரம் செய்தால்,அதற்கான பலன்கள் நமக்குக் கிடைக்க கொஞ்சம் காலம் ஆகும்;ஆனால்,ஜீவசமாதிகள்,சித்தர்களின் பீடங்களுக்குச் சென்று முறையாக வழிபட்டால்(முந்தைய பதிவில் வழிகாட்டியபடி) விரைவாக அதற்குரிய பலன்கள நம்மை வந்து சேருகின்றன;
காரைக்கால் பகுதியில் இருக்கும் ஜீவசமாதிகள்:

ஆலத்தூர்

சித்தர்மலை பெருமாள் சுவாமி
காரைக்காலில் இருந்து 7 கி.மீ.தூரத்திலுள்ள ஆலத்தூரில் ஜீவசமாதியாக இருக்கிறது.இங்கே சிவலிங்கம் பிரதிஷ்டை செய்யப்பட்டுள்ளது.இங்கு ஆவணி மாதம் வரும் மகம் நட்சத்திரத்திலிருந்து 10 நாட்களுக்கு விழா நடைபெறும்.ஆவணி மாதம் வரும் மூலம் நட்சத்திர நாளில் குருபூஜை விழா வருடந்தோறும் நடைபெற்றுவருகிறது.

காரைக்கால்

சற்குரு சீமான் சாமியார்
காரைக்கால் பேருந்து நிலையம் எதிரிலுள்ள மடத்தில் சமாதிபீடம் இருக்கிறது.இங்கு சிவலிங்க பிரதிஷ்டை செய்யப்பட்டுள்ளது.

நாகூர்

நாகூர் ஆண்டவர் தர்கா

நாகப்பட்டிணம்

அழுகண்ணி சித்தர்
நாகப்பட்டிணம் நகரின் மையப்பகுதியில் அமைந்திருக்கும் நீலாய தாட்சியம்மன் கோவிலுக்குள் அழுகண்ணி சித்தரின் ஜீவசமாதி அமைந்திருக்கிறது.

வடக்குப் பொய்கை நல்லூர்=கோரக்கர்
நாகப்பட்டிணத்தில் இருக்கும் சுனாமிப்பாலம் கடந்து 6 கி.மீ.தூரத்தில் இருப்பது கோரக்கரின் ஜீவசமாதி ஆகும்.தினமும் மதியம் அன்னதானமும்,முறையான,திட்டமிட்ட பராமரிப்பும் உள்ள சித்தரின் ஜீவசமாதி ஆகும்.பலவிதமான தெய்வீக சிறப்புகள் இங்கு உண்டு.ஒருமுறை போய் வந்தால்,கோரக்கரின் அற்புதத்தை உணருவீர்கள்.

மேலவாஞ்சூர்

ஸ்ரீரெங்கைய சுவாமிகள்
நாகூருக்கு வடக்கே 2 கி.மீ.தூரத்தில் மேலவாஞ்சூர் சுவாமிகளின் ஜீவசமாதி மடத்துக்குள் சமாதிக்கருவறையாக அமைந்திருக்கிறது.

திருமலை ராயன்பட்டினம்

புண்ணாக்கு சாமிகள்

காரைக்காலில் இருந்து 6 கி.மீ.தூரத்தில் உள்ள திருமலைராயன்பட்டிணம் ஹைஸ்கூல் சாலையில் சிவன் கோவில் உள்முகப்பில் புண்ணாக்கு சாமிகள் மடம் இருக்கிறது.இங்கு கருவறையே ஜீவசமாதியாக இருக்கிறது.வருடாந்திர குருபூஜை விழா மார்கழி மாதம் வரும் உத்திரட்டாதி நட்சத்திரநாளில் நடைபெற்றுவருகிறது.

நவகண்டயோகி

திருமலைராயன்பட்டினத்தில் வெங்கடேசப்பெருமாள் கோவில் அருகே எல்லையம்மன் கோவில் மேற்கு கோடியில் குளம் அருகே சவுரியார் மடம் இருக்கிறது.அந்த மடத்தினுள் சுவாமிகளின் ஜீவசமாதி இருக்கிறது.வருடாந்திர குருபூஜை விழா ஆனி மாதம் வரும் அவிட்டம் நட்சத்திரநாளன்று நடைபெற்றுவருகிறது.(தூங்கும் போது மனிதனின் உடல் ஒன்பது துண்டுகளாகப் பிரிந்து தூங்கும் யோகநிலைக்கு நவகண்டம் என்று பெயர்;ஏராளமான தமிழ் ஆன்மீக வாதிகளுக்கு இந்த நவகண்டம் சர்வசாதாரணமாக கைகூடியிருக்கிறது.நிச்சயமாக உங்கள் ஊரில் நவகண்டம் திறனைக் கொண்ட ஆன்மீக முயற்சியாளர்கள் இருப்பார்கள்.)

அக்கரை வட்டம்

சித்தானந்த சாமிகள்

காரைக்கால் டூ நாகூர் சாலையில் அக்கரை வட்டம் பிடாரிக்குளத்தில் சாலையைக் கடந்தால் சமாதிக் கோவில் இருக்கிறது.ஆவணி மாதம் வரும் மூலம் நட்சத்திரத்தன்று வருடாந்திர குருபூஜை விழா நடைபெற்றுவருகிறது.


புதுக்கோட்டை

ஜட்ஜ் சாமிகள்
புதுக்கோட்டையின் கீழ7 ஆம் வீதியில் உள்ள புவனேஸ்வரி கோவில் வளாகத்திற்குள் ஜீவசமாதி கோவில் அமைந்திருக்கிறது.பிரதி வைகாசி மாதம் வரும் அஸ்தம் நட்சத்திர நாளில் வருடாந்திர குருபூஜை விழா நடைபெற்றுவருகிறது.

சாந்தானந்தா சுவாமி
புவனேஸ்வரி அம்மன் கோவிலில் அதிஷ்டானம்

உலகநாத சுவாமி
புதுக்கோட்டை வடக்கு ராஜவீதி வடபுறம் சுவாமிகள் மடாலயம் பெயர் பொறித்த நுழைவு வாயில் இருக்கிறது.உள்ளே மடமும் சமாதிகோவிலும் உள்ளன.வருடாந்திர குருபூஜை விழா பங்குனி மாதம் வரும் உத்திராடம் நட்சத்திரநாளின் போது நடைபெற்றுவருகிறது.

தபசுமலை

தபசுமலை துறவிகள்
புதுக்கோட்டை டூ மதுரை சாலையில் 14 கி.மீ.தூரத்தில் லேனா விலக்கு இருக்கிறது.அங்கிருந்து தெற்கே 4 கி.மீ.தூரத்தில் தபசுமலை அமைந்திருக்கிறது.தபசுமலையில் வடமேற்கே சப்தமுனிவர்கள் அடங்கிய குகைப்பாதை இருக்கிறது.இங்கே சிலாவடிவங்கள் தனித்தனியே உள்ளன.

வடுகபட்டி
சுருளிச்சாமிகள்
புதுக்கோட்டை டூ திருச்சி சாலையில் கீரனூருக்கு அருகே வடுகப்பட்டியில் சுருளிச்சாமிகளின் ஜீவசமாதி அமைந்திருக்கிறது.

செம்பூதி
சிவந்திலிங்கசாமி & ஏகம்மை
புதுக்கோட்டை டூ குழிபிறை டூ பொன்னமராவதி வழித்தடத்தில் செம்பூதியில் சமாதி குருபீடம் இருக்கிறது.தம்பதியர் இருவரும் ஒரே நேரத்தில் ஜீவசமாதி ஆனார்கள்.வருடாந்திர குருபூஜை விழா மாசி மாதம் வரும் பவுர்ணமியன்று நடைபெற்றுவருகிறது.

பனையபட்டி
சாதுபுல்லானி சுவாமி
குழிபிறை அருகே பனையப்பட்டியில் ஆயிரம் பிள்ளையார் கோவில் வளாகத்திற்குத் தெற்கே அதிஷ்டானக் கோவில் அமைந்திருக்கிறது.சுவாமி திரு உருவம் பிரதிஷ்டை செய்யப்பட்டுள்ளது.வைகாசி மாதம் வரும் சதய நட்சத்திர நாளில் வருடாந்திர குருபூஜை விழா நடைபெற்றுவருகிறது.


தேனிமலை
ஸ்ரீபெருமானந்த சுவாமிகள்
பொன்னமராவதிக்கு வடக்கே 10 கி.மீ.தூரத்தில் தேனிமலை இருக்கிறது.இங்கே முருகன் குன்றுக்குக் கீழே அடிவாரத்தில் ஜீவசமாதி கோவில் அமைந்திருக்கிறது.

உலகம்பட்டி
சித்தர்பெருமான்
பொன்னமராவதியிலிருந்து 9 கி.மீ.தூரத்தில் உலகம்பட்டி ஞானியார் திருமடம் இருக்கிறது.இங்கே இருக்கும் சேவுகான்ந்த சுவாமி ஜீவசமாதி பீடம் அமைந்திருக்கிறது.

அரிமழம்
கோடகநல்லூர் சுந்தரசாமி
புதுக்கோட்டையிலிருந்து 15 கி.மீ.தூரத்திலுள்ள அரிமழம் பேருந்து செல்லும் சாலையை ஒட்டி அதிஷ்டானக்கோவில் அமைந்திருக்கிறது.

சிவகெங்கை மற்றும் காரைக்குடி
கோட்டையூர்
எச்சில் பொறுக்கி ஆறுமுகசாமி
காரைக்குடியிலிருந்து 3 கி.மீ.தூரத்தில் கோட்டையூர் இருக்கிறது.இங்கு நகரத்தார் சிவன் கோவிலின் கிழக்கே 2 கி.மீ.தொலைவு நகர விரிவாக்கப் பகுதியில் சமாதி கோவில் அமைந்திருக்கிறது.

காரைக்குடி
சிவன்செயல் சித்தர்
காரைக்குடி பழைய பஸ் நிலையம் அருகில் சமாதிகோவில் இருக்கிறது.

கோவிலூர்
கோவிலூர் ஆண்டவர்(எ) முத்துராமலிங்க ஞான தேசிகர்
காரைக்குடி அருகே மேற்கில் கோவிலூர் டூ கொற்றவாளிசூவரர் கோவிலருகே திரு மடத்தில் மகாலிங்கப்பிரதிஷ்டையுடன் கோவிலூர் ஆண்டவரின் அதிஷ்டானக் கோவில் இருக்கிறது.

ஸ்ரீதுறவு அருணாச்சல தேசிக சுவாமிகள்
மேற்படி மடத்தில் கோவிலூர் ஆண்டவர் லிங்க மூர்த்தியாகவும்,துறவு அருணாச்சல சுவாமி நந்தியாகவும் சன்னதி பலி பீடமாக கருணாந்திசாமி  அதிஷ்டானம் உள்ளது.

சிங்கம்புணரி

வாத்தியார் சாமி (எ) முத்துவடுகேச சுவாமி
திருப்பத்தூரிலிருந்து 20 கி.மீ.தூரத்தில் சிங்கம்புணரி டூ பிரான்மலை செல்லும் பாதையில் ஆற்றின் தென்கரையில் சித்தர் முத்துவடுகேசர் ஜீவசமாதி கோவில் இருக்கிறது.பவுர்ணமி தோறும் அன்னதானமும்,சிறப்பு வழிபாடும் நடைபெற்றுவருகிறது.கருவறையில் சமாதி மீது சித்தர் யோகநிலையில் இருக்கும்போது அதே நிலையில் சிலை செய்து தம் அருளை ஏற்றிய சிலை பிரதிஷ்டை செய்திருக்கிறார்.

நாட்டரசன்கோட்டை
கம்பர்
சிவகெங்கையிலிருந்து 7 கி.மீ.தூரத்தில் நாட்டரசன் கோட்டை இருக்கிறது.இங்கிருக்கும் கருப்பசாமி கோவில் அருகே கம்பர் பெருமான் சமாதி இருக்கிறது.

இடையமேலூர்
மாயாண்டி சாமிகள்
சிவகெங்கை மேலூர் சாலையில் 8 கி.மீ.தூரத்தில் இடையமேலூர் பேருந்து நிறுத்தத்திற்கு முன்னதாக சமாதிக்கோவில் அமைந்திருக்கிறாது.வருடாந்திர குருபூஜை விழா மார்கழி மாதம்  வரும் பூரம் மற்றும் உத்திரம் நட்சத்திரநாட்களில் நடைபெற்றுவருகிறது.


திருப்பத்தூர்
வாலைச்சித்தர்(எ)வேலாயுத சாமிகள்
திருப்பத்தூர் டூ சிவகெங்கை சாலையில் 4 கி.மீ.தூரத்தில் காட்டாம்பூர் தண்ணீர்ப்பந்தல் என்னும் சாமியார் மடம் கிழக்கே உள்ள தோப்பினுள் வாலைச் சித்தர்பீடம் அமைந்திருக்கிறது.


கீழப்பூங்குடி
மிளகாய்சாமி
திருப்பத்தூர் டூ சிவகெங்கை வழியில் 25 கி.மீ.தூரத்தில் இருக்கிறது.ஒக்கூர் மேற்கே 4 கி.மீ.கீழப்பூங்குடியில் மிளகாய் சாமிகளின் சமாதிக்கோவில் அமைந்திருக்கிறது.
மதுரையாண்டவர்(எ)பரஞ்சோதி சாமிகள்
கீழப்பூங்குடி மிளகாய் சாமிகள் சமாதிக்கோவிலுக்குப் பின்புறம் உள்ள தெருவில் மதுரையாண்டவர் என்னும் பரஞ்சோதி சுவாமிகளின் மடமும்,சமாதிக்கோவிலும் அமைந்திருக்கிறது.

சிவகெங்கை
மவுனகுரு சாமி
மதுரைமுக்கு ரோடு அருகில் சமாதி இருக்கிறது.

ஒழுகமங்கலம்
ஆரிய சித்தர்
சிங்கம்புணரியிலிருந்து 16 கி.மீ.தூரத்தில் ஒழுகமங்கலம் இருக்கிறது.அங்கிருக்கும் திருமேனிநாதம் திருக்கோவிலில் கன்னி மூலையில் ஆரிய சித்தர் ஜீவசமாதி நிலவறையில் இருக்கிறது.அந்த நிலவறையின் மேல் சிவலிங்கத் திருமேனி நிறுவப்பட்டுள்ளது.


சொக்கலிங்கபுரம்
சிவகுருநாத சித்தர்
சிங்கம்புணரியிலிருந்து 1 கி.மீ.தூரத்தில் சோளீஸ்வரர் கோவில் குளக்கரையில் சிவகுருநாத சித்தர் மற்றும் சீடர்கள் இருவரின் ஜீவசமாதிகள் அமைக்கப்பட்டுள்ளன.


மானாமதுரை
சதாசிவ பிரமேந்திரர்
நெரூரில் சமாதி ஆன அதே நேரத்தில் மானாமதுரை சோமநாதர் ஜோதியாக காட்சி தந்த இடத்தில் பிரகாரத்தில் சந்நிதி உள்ளது.ஆண்டு குருபூஜை விழா சித்திரை மாதம் வரும் சுத்த தசமியில் !!!


சிவப்பிரகாசம் சித்தர்சாமி மற்றும் வேலாயுதசாமி
மானாமதுரையில் இருவரது சமாதிகளும் இருக்கின்றன.


முனீஸ்வரர் சித்தர்
வேதியனேந்தல் விலக்கு அருகில் பேரில்லா மரம் உள்ள இடத்தில் ஜீவசமாதி இருக்கிறது.
தமிழ்நாட்டில் இருக்கும் சித்தர்பீடங்கள்,துறவிகளின் ஜீவசமாதிகள் இருக்கும் இடங்கள் பகுதி 4
புழல்
கண்ணப்ப சாமி
புழல் சிறைச்சாலையை அடுத்து காவாங்கரையில் கண்ணப்பசாமிகள் ஆசிரமம்;ஜீவசமாதி மேடை மீது சாமிகள் அமர்ந்த கோலத்துடன் காட்சியளிக்கிறார்.இவருக்கு அருகில் இவரது சீடர் கோவிந்த சாமியின் ஜீவசமாதி.

காரனோடை
மல்லையா சாமிகள்

காரனோடை தாண்ட குசஸ்தல ஆற்றுப்பாலத்தின் கீழ் வடகரையில் சமாதிகோவில் அமைந்திருக்கிறது.இங்கு சாமிகளின் சிலை கருங்கல்லால் பிரதிஷ்டை செய்யப்பட்டுள்ளது.

அந்தணர் அண்ணல் ஞானாச்சாரியார்

காரனோடை கோபிகிருஷ்ணா தியேட்டர் எதிரில் ஆத்தூர் சாலையில் இவரது சமாதி கோவில் இருக்கிறது.பிரதி ஆவணி மாதம் வரும் முதல் நாள் வருடாந்திர குருபூஜை விழா நடைபெற்றுக்கொண்டிருக்கிறது.

அலமாதி

மார்க்கண்டேய மகரிஷி
அலமாதீஸ்வரர் கோவிலுக்குள் சமாதி அமைந்திருக்கிறது.

கோவணச்சாமி

அலமாதீஸ்வரர் கோவில் அருகில் சமாதி இருக்கிறது.

பூதூர்
ஷா இன்ஷா பாபா
செங்குன்றம் வடக்கே சோழவரம் டூ ஓரக்காடு ரோட்டில் 6 கி.மீ.பூதூர் கிராமம் இருக்கிறது.இந்த கிராமத்தின் மேற்குப்பகுதியில் தர்கா உள்ளது.

பஞ்சேஷ்டி
புலேந்திரர்(சித்தர்களின் தலைவர் அகத்தியரின் சீடர்)
ரெட் ஹில்ஸ்  டூ பொன்னேரி நெடுஞ்சாலையில் ஜனப்பன் சத்திரம் கூட்டுரோடு தாண்டி பஞ்சேஷ்டி திருத்தலத்திலுள்ள அகத்தீஸ்வரர் ஆலயத்தினுள் ஜீவசமாதி உள்ளது.இங்கு இருக்கும் இஷ்டலிங்கேஸ்வரர் என்ற பெயரில் சிவலிங்கம் பிரதிஷ்டை செய்யப்பட்டுள்ளது.

அம்பத்தூர்
ஐயா சூரியநாத கருவூரார்
பதினெண் சித்தர் மடம்,13,குமாரசுவாமி தெரு,வரதராசபுரம்,அம்பத்தூர்.பிரதி அக்டோபர் 10 ஆம் தேதி வருடாந்திர குருபூஜை விழா நடைபெற்றுவருகிறது.

வடதிருமுல்லைவாயில்
அன்னை நீலம்மையார்
37/1 வடக்கு மாடவீதி மாசிலாமணி ஈஸ்வரன் கோவில் அருகில் ஜீவசமாதி இருக்கிறது.பிரதி கார்த்திகை மாதம் வரும் மிருகசீரிடம் நட்சத்திரத்தன்று வருடாந்திர குருபூஜை விழா நடைபெற்றுவருகிறது.

மாசிலாமணி சுவாமிகள்
சோளம்பேடு தாமரைக்குளம் ஆஞ்சநேயர் கோவிலில் ஜீவசமாதி அமைந்திருக்கிறது.

பூந்தமல்லி
கர்லாக்கட்டை சித்தர்
வைத்தீஸ்வரன் கோவிலில் சிவன் சந்நதிக்கு வலப்புறம் தூணில் உள்ளார்.

பைரவ சித்தர்
பஸ்நிலையம் எதிரில் உள்ள வரசித்தி விநாயகர் கோவிலில் ஜீவசமாதி இருக்கிறது.

கருடகோடி சித்தர்

பூந்தமல்லி தண்டரை சாலையில் அமைந்துள்ள சித்தர்காட்டிலிருந்து 1 கி.மீ.தூரத்தில் சுந்தரவரதபெருமாள் கோவில் தெப்பக்குள இடப்பாகத்தில் ஜீவசமாதி கோவில் இருக்கிறது.

ஸ்ரீபெரும்புதூர்
அருள்வெளி சித்தர்
பூதேரிபண்டை கிராமம்= வி.ஜி.பி.ராமானுஜ கிராமத்தில் ஜீவசமாதி இருக்கிறது.உயரமான சமாதி மேடை.சுவாமிகளின் சிலை பிரதிஷ்டை செய்யப்பட்டுள்ளது.

வெள்ளறை கிராமம்
ராஜராஜ பாபா சித்தர்
கொளத்தூர் சமீபம் வெள்ளறை கிராமத்தில் அமைந்துள்ளது.

மாங்காடு

சர்வசர்ப்ப சித்தர்

மாங்காடு டூ போரூர் சாலையில் பேரம்புத்தூர் அருகில் கோவிந்தராஜா நகரில் ஸ்ரீசிவசித்தர் கோவிலில் ஜீவசமாதி இருக்கிறது.

புதுப்பட்டிணம்(ஈ.சி.ஆர்)

மாயவரம் சித்தர்சாமி & மாதாஜி சித்தர்

ஈ.சி.ஆர்.சாலை புதுப்பட்டிணம் அருகே மாயவரம் சித்தர்சாமி மற்றும் 18 சித்தர் திருவுருவங்கள் இருக்கின்றன.இருவருக்கும் ஜீவசமாதி கோவில் இருக்கிறது.

கோவளம்

ஆளவந்தார் சாமி

கோவளம் டூ நெமிலி வி.ஜி.பி.தாண்டி பீகாவரம் அருகில் இருக்கும் நெமிலியில் இவரது ஜீவசமாதி இருக்கின்றன.

திருக்கழுகுன்றம்

குழந்தை வேலாயுத சித்தர்

செங்கல்பட்டிலிருந்து வடக்கே 12 கி.மீ.தூரத்திலுள்ள திருக்கச்சூரில் சிறிய மலையில் மருந்தீஸ்வரர் கோவில் அருகே ஜீவசமாதிக் கோவில் அமைந்திருக்கிறது.

அப்பூர்=பதஞ்சலி சுவாமி

திருக்கச்சூர் டூ ஓரகடம் இடையே அமைந்துள்ள அப்பூர் பஸ்நிலையம் அருகில் கருமாரியம்மன் புதுக்கோவில் அகஸ்தீஸ்வரர் ஆஸ்ரமத்தில் ஜீவசமாதி இருக்கிறது.

திருப்போரூர்

சிதம்பரச்சாமி

திருப்போரூரிலிருந்து 2 கி.மீ.கண்ணகப்பட்டு உள்ளது.இங்கே சிதம்பரசாமிகள் மடாலயம் நடுப்பகுதியில் ஜீவசமாதியின் கருவறையில் சிவலிங்கப்பிரதிஷ்டை  செய்யப்பட்டுள்ளது.பிரதி வைகாசி மாத பவுர்ணமியன்று வருடாந்திர குருபூஜை விழா நடைபெற்றுவருகிறது.

செம்பாக்கம்

இரட்டை சித்தர்கள்

செங்கல்பட்டு டூ கூடுவாஞ்சேரி சாலையில் செம்பாக்கம் ஸ்ரீபொன்னம்பல சாமிகள் மற்றும் ஸ்ரீதிருமேனிலிங்க சாமிகள் ஆகியோரது ஜீவசமாதிகள் உள்ளன.

கூடுவாஞ்சேரி

மலையாள சாமி

கூடுவாஞ்சேரி நந்திவரத்தில் காசிவிஸ்வநாதர் கோவில்பின்புறம் ஜீவசமாதி இருக்கிறது.அருகில் இருக்கும் வயல்வெளியில் தியாகராய சாமி ஜீவசமாதி இருக்கிறது.

அச்சரப்பாக்கம்

முத்துசாமி சித்தர்

அச்சிறுப்பாக்கம் டூ கயப்பாக்கம் சாலையில் 8 கி.மீ.தூரத்தில் நடுப்பழனி முருகன் கோவில் உள்ள குன்று இருக்கிறது.இந்த முருகன் கோவில் வெளியே சன்னதிக்கு வடபுறம் முத்துச்சாமி சமாதி மண்டபம் இருக்கிறது.இங்கே சிவலிங்கம் பிரதிஷ்டை செய்யப்பட்டுள்ளது.

காஞ்சிபுரம்

திருத்தணி

சுரைக்காய் சித்தர்

சென்னை டூ ஊத்துக்கோட்டை சாலையில் புத்தூருக்கு 5 கி.மீ.தூரத்தில் உள்ள நாராயணவனம் என்னும் இடத்தில் ஸ்ரீநிவாசப்பெருமாள் கோவிலுக்கு  ஈசானிய திசையில் ஜீவசமாதிகோவில் இருக்கிறது.இங்கு சிவலிங்கம் பிரதிஷ்டை செய்யப்பட்டுள்ளது.

வெற்றிலை தடுக்கு

கங்காதர சுவாமி

புத்தூர் நாராயண வனம் செல்லும் பாதையில் 7 கி.மீ.தூரத்தில் இருக்கும் கிராமம் வெற்றிலை தடுக்கு=ஒட்டப்பாளையம் என்னும் ஊரில் ஜீவசமாதி இருக்கிறது.

அரக்கோணம்=அருளானந்தர்

அரக்கோணத்திலிருந்து 5 கி.மீ.தூரத்திலுள்ள காவனூர் நரசிங்கபுரத்தில் ஜீவசமாதி இருக்கிறது.

நாகவேடு

அமலானந்தர் & விமலானந்தர்

அரக்கோணத்திலிருந்து 10 கி.மீ.தூரத்திலுள்ள நாகவேடு கிராமத்தில் அமலானந்தர் மடத்தில் இவர்களின் ஜீவசமாதிகள் இருக்கின்றன.(இவர்கள் இருவரும் அருளானந்தரின் சீடர்கள்!!!)

காஞ்சிபுரம்

ஸ்ரீமஹாபெரியவர்

காஞ்சிபுரம் சங்கர மடத்தின் உட்பகுதியில் ஸ்ரீமஹா பெரியவர் ஸ்ரீ சந்திரசேகரேந்திர சரஸ்வதி சுவாமிகளின் அதிஷ்டானம் அதி சக்தி வாய்ந்ததாக இருக்கிறது.

கச்சியப்ப முனிவர்

பிள்ளையார்பாளையம் டூ புதுப்பாளையம் தெருவில் திருவாடுதுறை ஆதீனக் கிளை மடத்தில் ஜீவசமாதி அமைந்திருக்கிறது.வருடாந்திர குருபூஜை விழா சித்திரை மாதம் வரும் புனர்பூச நட்சத்திர நாளில் நடைபெற்றுவருகிறது.

காளாங்கிநாதர்

ஏகாம்பர நாதர் கோவில் தேவஸ்தான அலுவலகத்தின் பின்புறம் உள்ள இஷ்ட சித்தீஸ்வரர் சன்னதியில் இவரது ஜீவசமாதி அமைந்திருக்கிறது.

காஞ்சி ஸ்ரீராமன் சாமி(சிவசாமி)

காஞ்சிபுரம் மேற்குப்புறம் உள்ள மயான பூமியின் தொடக்கத்தில் சமாதி கோவிலிருக்கிறது.இங்கே சிவலிங்கம் பிரதிஷ்டை செய்யப்பட்டுள்ளது.(மயான பூமியை ஒட்டியோ,மயானபூமியுடன் சேர்த்தோ இருக்கும் ஜீவசமாதிகளுக்கு அளவற்ற சக்தி உண்டு.உதாரணம் ஸ்ரீவில்லிபுத்தூரில் சிவகாசி ரோட்டில் இருக்கும் மூவர் சமாதி!!!)

விசுவநாத சுவாமி

சின்ன காஞ்சிபுரம் புண்ணியகோடீஸ்வரர் கோவிலுக்கு அடுத்த பண்ணையின் கன்னியம்மன் கோவில் தெருவில் ஜீவசமாதிக்கோவில் இருக்கிறது.இங்கு முருகன் சிலை பிரதிஷ்டை செய்யப்பட்டுள்ளது.

சற்குரு சிவசாமி(ஸ்ரீபோடா சாமிகள்)

ஒலிமுகமது பேட்டைக்கு முன்பாக வெள்ளைக் குளக்கரை மயானபூமியின் தொடக்கத்தில் கங்கை அம்மன் கோவில் தெருவில் ஜீவசமாதிக்கோவில் இருக்கிறது.
இங்கு வருடாந்திர குருபூஜை விழா சித்திரை மாதம் வரும் சதயம் நட்சத்திரத்தன்று நடைபெற்றுவருகிறது.

தாண்டவராய சாமி

காஞ்சிபுரத்திலிருந்து 11 கி.மீ.தூரத்திலுள்ள கோவிந்தவாடியில் இவரது சமாதியும் சீடர்களின் சமாதிகளும் இருக்கின்றன.

காகபுஜண்டர்

காஞ்சிபுரம் டூ வந்தவாசி நெடுஞ்சாலையில் மாங்கால் கூட்டுரோடு அருகில் சோதியம்பாக்கம் பாவூரில் திருக்கோவில் அமைந்திருக்கிறது.எத்தனை யுகங்கள் கழிந்தாலும்,எத்தனை பிரம்மாக்கள் அழிந்தாலும் நிரந்தரமாக இருக்கும் ஒரே சித்தர் இவர் மட்டுமே!!


ஓம்சிவசக்திஓம்

தமிழ்நாட்டில் இருக்கும் சித்தர்பீடங்கள்,துறவிகளின் ஜீவசமாதிகளின் அமைவிடங்கள் பகுதி 5

திண்டிவனம்

சாரம்
முத்துராம பிரம்மம்
திண்டிவனம் டூ ஒலக்கூர் சாலையில் 10 கி.மீ.தூரத்தில் உள்ளது சாரம் கிராமம்.இங்கிருக்கும் திரவுபதி அம்மன் கோவில் அருகே ஜீவசமாதி அமைந்திருக்கிறது.வருடாந்திர குருபூஜை விழா இங்கு ஒவ்வொரு மார்கழி மாதமும் வரும் திருஓணம் நட்சத்திரநாளில் நடைபெற்றுவருகிறது.

மயிலம்

சிவஞான பாலசித்தர்
திண்டிவனம் டூ புதுச்சேரி சாலையில் மயிலம் மலை மேல் உள்ள முருகன் சன்னதியின் தெற்கே சமாதிக்கோவில் அமைந்திருக்கிறது.இங்கு வருடாந்திர குருபூஜை விழா ஆனி மாதம் திருவாதிரை நட்சத்திரநாளில் நடைபெற்றுவருகிறது.

திருவக்கரை

குண்டலினி சித்தர்
மயிலத்தை அடுத்த திருவக்கரை வக்கிரகாளி கோவிலில் சந்திரமவுலீஸ்வரர் சன்னதியின் இடப்புறம் ஜீவசமாதி அமைந்திருக்கிறது.இங்கு சித்தரின் சிலை பிரதிஷ்டை செய்யப்பட்டுள்ளது.

பெருமுக்கல்

முத்தாலீஸ்வரர்
திண்டிவனத்திலிருந்து 10 கி.மீ.தூரத்தில் இருக்கும் பெருமுக்கல் கிராமத்தில் இந்த ஜீவசமாதி அமைந்திருக்கிறது.

உப்புவேலூர்

குழந்தைவேல்சாமி
திண்டிவனம் டூ கிளியனூர் சாலையில் 18 கி.மீ.தூரத்தில் இருப்பது உப்புவேலூர்.இங்கிருந்து 6 கி.மீ.தூரத்தில் இவரது ஜீவசமாதி அமைந்திருக்கிறது.

வன்னியநல்லூர்

ஸ்ரீதேவராசு சுவாமிகள்
சூனாம்பேடு அருகில் வன்னியநல்லூர் கிராமத்தில் ஜீவசமாதி அமைந்திருக்கிறது.இங்கு ஆனி மாதம் வரும் பூராடம் நட்சத்திர நாளில் வருடாந்திர குருபூஜை விழா!!!

புதுச்சேரி சுற்றுப்புறம்

இரும்மை மாகாணம்
கழுவெளி சித்தர்
ஆரோவில்லில் இருந்து 3 கி.மீ.தூரத்தில் இந்த சித்தரின் ஜீவசமாதி அமைந்திருக்கிறது.

புதுச்சேரி

அரவிந்தர் மற்றும் ஸ்ரீஅன்னை
பறவைச் செட்டித் தெரு கடைசியில் அரவிந்தர் மற்றும் ஸ்ரீஅன்னை இருவரது ஜீவசமாதிகளும் இருக்கின்றன.

தொள்ளை காது சாமிகள்
மணக்குள விநாயகர் கோவிலில் விநாயகருக்குப் பின்புறம் இவரது ஜீவசமாதி அமைந்திருக்கிறது.

மவுலானா சாகிப் மெய் ஞான சாமிகள்
பாண்டி முல்லா வீதியின் கடைசியில் தர்கா அருகில் இவரது ஜீவ சமாதி அமைந்திருக்கிறது.

நாகலிங்கசாமிகள்
புதுவை அம்பலத்தாடையர் மடம் சாலையில் ஸ்ரீகாளஹஸ்தி கோவில் பின்புறம் இவரது ஜீவசமாதிகள் அமைந்திருக்கிறது.ஒவ்வொரு ஆண்டும் ஆனி மாதம் 7 ஆம் நாள் வருடாந்திர குருபூஜை விழா நடைபெற்றுவருகிறது.

அக்கா பரதேசி சாமிகள்
முத்தியால்பேட்டை வாழைக்குளம் பகுதி குதிரைக்குளம் அருகே ஜீவசமாதிக்கோவில் அமைந்திருக்கிறது.இங்கே சிவலிங்கம் பிரதிஷ்டை செய்யப்பட்டுள்ளது.

தட்டாஞ்சாவடி

ஸ்ரீகம்பளி ஞான தேசிக சாமிகள்
தொழிற்பேட்டை பின்புறம் ருத்ரபூமியில் உள்ள ஆஸ்ரம வளாகத்துள் சமாதிக்கோவில் இருக்கிறது.இங்கு கருவறையில் உள்ள நந்தியின் கீழ் சுவாமிகளின் சீடர் அம்பலவாண சாமிகள் அடக்கம் செய்யப்பட்டுள்ளார்.இங்கு சிவலிங்கம் பிரதிஷ்டை செய்யப்பட்டுள்ளது.

ஸ்ரீபெரியவர்களுக்கு பெரியவர்
கம்பளி ஞான தேசிக சுவாமிகளின் சமாதிக்குப் பின்புறம் ஜீவசமாதி அமைந்திருக்கிறது.

சித்தன்குடி

யாழ்ப்பாணம் கதிர்வேல் சுவாமிகள்
சித்தன்குடி பிருந்தாவன் 3 வது குறுக்குத் தெருவின் மடத்தில் ஜீவசமாதி பீடம் அமைந்திருக்கிறது.

எல்லப்பிள்ளை சாவடி

சுப்ரமணிய அபிநவ சச்சிதானந்த சுவாமிகள்
எல்லப்பிள்ளள சாவடியில் இருக்கும் ஸ்ரீசாரதா கோவிலில் ஜீவசமாதிக்கோவில் அமைந்திருக்கிறது.

ஸ்ரீசச்சிதானந்த சாமி

ஸ்ரீசாரதா சிவகெங்கை மடத்திற்கு மேற்கில் 100 அடி சாலையில் 21 எண் வளாகத்தின் உட்புறம் மண்டபத்தில் ஜீவசமாதி கோவில் அமைந்திருக்கிறது.

முத்திரைப்பாளையம்

ஸ்ரீமண்ணுருட்டி சுவாமிகள்
பழைய பஸ் ஸ்டாண்ட் டூ தென்னஞ்சாலை கோவிந்தசாமி முதலியார் தோட்டம்(சுதேசி காட்டன் மில் எதிரில்) இவரது ஜீவசமாதி அமைந்திருக்கிறது.

முத்தியால்பேட்டை

முத்தியால் பேட்டை அம்பிகா திரையரங்கம் எதிரில் திரு முத்துகுமாரசாமி முதலியார் தோட்டத்தில் ஜீவசமாதி அமைந்திருக்கிறாது.இந்த ஜீவபீடம் வேலாயுத ஈசுவரர் திருக்கோவிலாக வழிபடப்படுகிறது.இங்கு சீடர் கோவிந்தசாமியின் சமாதி அருகில் உள்ளது.

அரியூர் சர்க்கரை ஆலை

குருசாமி அம்மையார்
சர்க்கரை ஆலை காம்பவுண்டு தாண்டியவுடன் ஆஸ்ரம வளாகத்தில் ஜீவசமாதி அமைந்திருக்கிறது.வருடாந்திர குருபூஜை சித்திரா பவுர்ணமி!!!

பிள்ளையார் குப்பம்

ரெட்டியப்ப சுவாமிகள்
கிருமாம்பாக்கம் அருகில் இவரது ஜீவசமாதி அமைந்திருக்கிறது.

திருபுவனை
சிற்றம்பல அப்பார்
திருபுவனையில் அப்பார் சன்னதி என்றழைக்கப்படுகிறது.

ஏம்பலம்

அம்பலத்தாடி அப்பர்
ஏம்பலம் மடத்திற்கு அருகில் ஜீவசமாதி இருக்கிறது.வருடம் தோறும் வரும் புரட்டாசி 15 ஆம் நாள் வருடாந்திர குருபூஜை விழா நடைபெற்றுவருகிறது.

சிங்காரப்பட்டு

ரெங்கசாமி சித்தர்
புதுச்சேரியிலிருந்து 24 கி.மீ.தூரத்தில் மண்ணடிப்பட்டு இருக்கிறது.அங்கிருந்து 2 கி.மீ.தூரத்தில் சிங்காரப்பட்டு இருக்கிறது.இதன் மேற்கு எல்லையில் சிறிய முருகன் கோவில் கருவறை முன்பு உள்ள மயில் பீடம் இவரது சித்தர்பீடம் ஆகும்.

லாலப்பேட்(கருவடிக்குப்பம்)

சித்தானந்த சுவாமிகள்
கருவடிக்குப்பத்தில் ஜீவசமாதி அமைந்திருக்கிறது.

ஸ்ரீகணபதி சுவாமிகள்

கருவடிக்குப்பம் டூ இடையஞ்சாவடி ரோட்டின் கடைசியில் ஆஸ்ரமமும் அதன் அருகில் சமாதிக்கோவிலும் அமைந்திருக்கிறது.இந்த மேடையின் மீது சிவலிங்கம் பிரதிஷ்டை செய்யப்பட்டுள்ளது.

காராமணிக்குப்பம்

ஸ்ரீசக்திவேல் பரமானந்த சுவாமிகள்
காராமணிக்குப்பம் ரயில்வே கேட் தாண்டி உள்ளது.

மண்ணடிப்பட்டு

பவழக்கொடி சித்தர்
புதுச்சேரி மண்ணடிப்பட்டு சாலையில் சோம்பட்டு கிராமம் இருக்கிறது.இந்த கிராமத்தின் தொடக்கத்தில் பவழக்கொடி சித்தரின் சமாதிக்கோவில் அமைந்திருக்கிறது.

சின்னபாபு சமுத்திரம்

ஸ்ரீமகான் படே சாயபு
பாண்டி டூ விழுப்புரம் சாலையில் இருப்பது கண்டமங்கலம்!இந்த கிராமத்திலிருந்து 2 கி.மீ.தூரத்தில் உள்ளது சின்னபாபு சமுத்திரம் என்னும் கிராமம்.இங்கு இவரது ஜீவசமாதி கோவில் இருக்கிறது.செவ்வாய் தோறும் சிறப்பு பூஜைகள் நடைபெற்றுவருகின்றன.

அரும்பார்த்தபுரம்

தேங்காய் சுவாமிகள்
புதுவை கட்டாஞ்சாவடி எதிரில் சிறிய சமாதி பீடம் அமைந்திருக்கிறது.இங்கு சிவலிங்கம் பிரதிஷ்டை செய்யப்பட்டுள்ளது.

பள்ளித்தென்னல்

தட்சிணாமூர்த்தி சாமிகள்
புதுவை விழுப்புரம் சாலையில் பள்ளித்தென்னல் கிராமம் அமைந்திருக்கிறது.இங்கு ஐயனார் கோவிலும் குளமும் உள்ளன.இந்த குளத்தின் வட கரையில் சிவலிங்கம் பிரதிஷ்டை செய்யப்பட்டுள்ளது.

புதுப்பட்டு

ஸ்ரீலட்சுமண சுவாமிகள்
பாண்டி வடக்கே கிழக்கு கடற்கரை சாலையில் புதுப்பட்டு காட்டுப்பகுதியில் ஐயனாரப்பன் என்னும் மஞ்சனீஸ்வரன் கோவில் இருக்கிறது.இந்தக் கோவிலின் பின்புறம் வடமேற்கு மூலையில் சமாதிபீடம் அமைந்திருக்கிறது.

முத்தியால்பேட்டை

முருகனடிமை பச்சையம்மாள்
கருவடிக்குப்பம் மயானத்தில் சமாதிக்கோவில் இருக்கிறது.

வில்லியனூர்(ஓதியம்பட்டு)

வண்ணார் பரதேசி சாமிகள்
புதுவை டூ முருகம்பக்கம் வழி வில்லியனூர் சாலையில் 7 கி.மீ.தூரத்தில் ஒதியம்பட்டு இருக்கிறது.இந்த ஊருக்கு மேற்கே சமாதி பீடம் இருக்கிறது.இங்கே சிவலிங்கம் பிரதிஷ்டை செய்யப்பட்டுள்ளது.

கணுவாய் பேட்டை

திருக்காஞ்சி சாமியார்( எ) வியோமா முனிவர்
வில்லியனூர் கணுவாய் பேட்டை மல்லிகா தியேட்டர் வீதி கடைசியில் சாமியார் தோப்பு இருக்கிறது.இந்த தோப்பினுள் சமாதிக்கோவில் அமைந்திருக்கிறது.

சுல்தான் பேட்டை

ஸ்ரீராம் பரதேசி சுவாமிகள்
சுல்தான்பேட்டை திருப்பத்தில் (பைபாஸ் ரோடு அருகில்) மூலக்கடையில் பிருந்தாவன ஜீவபீடம் இருக்கிறது.

நல்லாத்தூர்

சிவப்பிரகாச சாமிகள்
வில்லியனூர் ஏம்பலம் நல்லாத்தூர் சிவஞான பாலைய சாமிகள் மடத்தில் அடக்கம் செய்யப்பட்டுள்ளார்.இங்கு இவரது ஜீவசமாதியின் மீது சிவலிங்கம் பிரதிஷ்டை செய்யப்பட்டுள்ளது.

தென்னம்பாக்கம்

அழகர்சாமிகள் & சாம்பசிவசாமிகள்

வில்லியனூர் ஏம்பலம் அருகில் தென்னம்பாக்கம் இருக்கிறது.தோப்பிற்குள் அழகுமுத்து அய்யனார் கோவில்  இருக்கிறது.இந்த அய்யனார் பீடத்திற்குப் பின்னால் இந்த ஜீவசமாதிகள் அமைந்திருக்கின்றன.

வளவனூர்

ஸ்ரீமுத்தையாதேசிகன் சுவாமிகள்
வளவனூர் வன்னி மடாலயத் தெருவிலுள்ள மடாலயத்தில் ஜீவசமாதி தரைமட்டத்திற்குக் கீழே பாதாளத்தில் அமைந்திருக்கிறது.இங்கு சிவலிங்கம் பிரதிஷ்டை செய்யப்பட்டுள்ளது.வருடாந்திர குருபூஜை விழா ஆடிமாதம் வரும் மகம் நட்சத்திரம்!!!

சத்சொரூபானந்த சுவாமி

வளவனூர் முதல் பேருந்து நிறுத்தத்தில் சாலையின் தென்புறம் சொரூபானந்த சாமி ஐயப்பன் மடம் இருக்கிறாது.இந்த மடத்தில் வலப்புறம் கிழக்குப் பார்த்த சிறிய கருவறையே இவரது ஜீவசமாதி பீடம் ஆகும்.இங்கு கருங்கல்லால் வடிக்கப்பட்ட திருவடிகள் பிரதிஷ்டை செய்யப்பட்டுள்ளது.தை மாதம் வரும் உத்திரட்டாதி வருடாந்திர குருபூஜை நாள்!!!

ஸ்ரீசண்முக சுவாமிகள்
வளவனூர் சத்திரம் ஜீவசமாதி!

ஸ்ரீதண்டாயுதபாணி சுவாமிகள்
வளவனூர் கிழக்கு பாண்டி ரோட்டில் இருக்கிறது.

பொம்மபுரம்

ஸ்ரீசிவஞான பாலைய சுவாமிகள்
பாண்டி வடக்கே கிழக்கு கடற்கரை சாலையில் 10 கி.மீ.தூரத்தில் பொம்மபுரம் என்னும் பொம்மையார்புரம் சிற்றூர் இருக்கிறது. பொம்மபுர ஆதீனத் திருமடம் முருகன் சன்னதியில் திரு உருவத்திற்கு முன்னதாக உள்ள சுரங்கப்பாதையில் ஜீவ சமாதி இருக்கிறது.இங்கு வைகாசி மாதம் வரும் விசாகம் நட்சத்திர நாளில் வருடாந்திர குருபூஜை விழா!!

ஓம்சிவசக்திஓம்

தமிழ்நாட்டில் இருக்கும் சித்தர்பீடங்கள்,துறவிகளின் ஜீவசமாதிகளின் இருப்பிடங்கள் பகுதி 6
திண்டுக்கல்

ஓதச்சாமி(சுப்பையாசாமி)
திண்டுக்கல் மலைக்கோட்டையின் மேற்குப்புறம் முத்தழகுப்பட்டிக்குச் செல்லும் வழியில் இந்த ஜீவசமாதி இருக்கிறது.பல்வேறு அதிசயங்களை புதைத்து வைத்திருக்கிறது இந்த ஓதசுவாமி திருக்கோவில்.

கருணாம்பிகை அம்மையார்

திண்டுக்கல் காமராஜர் தெருவில் சாது கருணாம்பிகை அம்மையார் ஆஸ்ரமத்தில் அதிஷ்டானம் இருக்கிறது.சமாதியின்மேல் ஸ்ரீகருணானந்தேஸ்வரர் என்னும் பெயரில் சிவலிங்கப்பிரதிஷ்டை செய்யப்பட்டுள்ளது.

கா.புதுப்பட்டி

கள்ளியடி பிரம்மம்
திண்டுக்கல் டூ திருச்சி சாலையில் 20 கி.மீ.தூரத்தில் வடமதுரை அருகே கா.புதுப்பட்டியில் சமாதி இருக்கிறது.

கசவனம்பட்டி

நிர்வாண மவுனகுரு சாமி
திண்டுக்கல் டூ கன்னிவாடி அருகே கசவனம்பட்டி கிராமம் இருக்கிறது.இங்கே ஆஸ்ரமமும்,சமாதிக்கோவிலும் இருக்கிறது.

திருமலைக்கேணி

காமாட்சி மவுனகுரு சுவாமிகள்
திண்டுக்கல் டூ செங்குறிச்சி சாலையில் 23  கி.மீ.தூரத்தில் திருமலைக்கேணி இருக்கிறது.இங்கு சிறிய குன்றின் மேல் முருகன் கோவில் அமைந்திருக்கிறது.ஸ்ரீகாமாட்சி மவுனகுரு சாமிகள் மடாலயம் அமைந்திருக்கிறது. மடத்துள் சமாதிக்கோவில் இருக்கிறது.பிரதி வருடம் ஆடிமாதம் வரும் பூராடம் நட்சத்திர நாளில் குருபூஜை விழா நடைபெற்றுக்கொண்டிருக்கிறது.

பெரியகுளம்

மவுனகுரு சாமி
பெரியகுளம் வராகநதி பாலத்தில் இருந்து அருள் தியேட்டர் செல்லும்   வழியில் சமாதிக்கோவில் அமைந்திருக்கிறது.

ஒட்டன் சத்திரம்

ராமசாமி சித்தர்
ஒட்டன்சத்திரம் தீயணைப்பு நிலையம் அருகில் இருக்கிறது.

கொடுவிலார்ப்பட்டி

ஸ்ரீசச்சிதானந்த சாமி
தேனியிலிருந்து 10 கி.மீ.தூரத்தில் கொடுவிலார்பட்டி  சச்சிதானந்த ஆஸ்ரமம் வளாகத்துக்குள் சமாதிக்கோவில் அமைந்திருக்கிறது.

உசிலம்பட்டி கோட்டைப்பட்டி

நமோ நாராயண தேசிக ஆனந்த சாமிகள்

மதுரை உசிலம்பட்டியிலிருந்து எழுமலை சாலையில் கோட்டைப்பட்டி என்னுமிடத்தில் ஜீவசமாதி இருக்கிறது. இங்கிருக்கும் நந்திக்கு கீழே சுவாமியின் சீடர் குருநாத சாமி அடக்கமாகியிருக்கிறார்.வருடாந்திர குருபூஜை விழா ஆடிமாதம் 12 ஆம் நாள்!!!

சாப்டூர் விட்டல்பட்டி

சடையானந்த ரெட்டியார் சாமி

உசிலம்பட்டியிலிருந்து 36 கி.மீ.தூரத்தில் இருப்பது சாப்டூர். அங்கிருந்து 4 கி.மீ.தூரத்தில் இருப்பது வண்டப்புலி விட்டல்பட்டி.இங்கிருக்கும் தெப்ப ஊரணி அருகில் சமாதிக்கோவில் அமைந்திருக்கிறது.

செட்டியப்பட்டி
நிலைமாறானந்தா சாமி
செட்டியப்பட்டியில் இருக்கிறது.

கரூர்

கருவூரார்
கரூர் பசுபதீஸ்வரர் கோவில் கருவூராரின் சமாதிக்கோவில் அமைந்திருக்கிறது. சித்திரை மாதம் வரும் அஸ்தம் நட்சத்திர நாளன்று வருடாந்திர குருபூஜை விழா நடைபெற்றுவருகிறது.

ஒத்தை வேட்டி சாமி
அமராவதி ஆற்றின் வடகரை நஞ்சப்பன் படிக்கட்டுத் துறையில் அதிஷ்டானக் கோவில் அமைந்திருக்கிறது.ஆனி மாதம் வரும் அனுஷம் நட்சத்திர நாளில் வருடாந்திர குருபூஜை விழா!!!

நெரூர்

சதாசிவ பிரமேந்திரர்
கரூரிலிருந்து 10 கி.மீ.தூரத்தில் காவேரிக் கரையில் கைலாச ஆஸ்ரம வளாகத்தில் ஜீவசமாதிக்கோவில் அமைந்திருக்கிறது.

சதாசிவானந்தா

சதாசிவானந்தா ஆஸ்ரமத்தில் சமாதியில் மேருபீடம் அமைக்கப்பட்டுள்ளது.

திருச்சி

மவுனகுரு சாமி

திருச்சி சத்திரம் பேருந்து நிலையம் அருகே ஓயாமரி எனப்படும் இடுகாட்டுப்பகுதியில்  தேவஸ்தானம் என்ற பெயரில் நினைவிடம் அமைந்திருக்கிறது.

மாக்கான் சாமி

ஓயாமரி சாலையில் இடதுபக்கம் காவேரிக்கரையில் மடமும் சமாதிக்கோவிலும் உள்ளன.

ஸ்ரீரங்கம்

ராமானுஜர்

ஸ்ரீரங்கம் ரங்கநாதர் கோவிலுனுள் உடையவர் சன்னதியில் ராமானுஜர்  ஸ்தூல திருமேனி புனுகு சாத்தப்பட்டு அமர்ந்த கோலத்தில் உள்ளது.

வரகனேரி

ஸ்ரீகுழுமியானந்த சுவாமி

திருச்சி வரகனேரி பஜார் தெருவின் தென்பகுதியில் ஸ்ரீசற்குரு குழுமியானந்த சுவாமிகள் மடாலயம் உள்ளே அதிஷ்டானக் கோவில் இருக்கிறது.வருடாந்திர குருபூஜை விழா வைகாசி மாதம் வரும் திருவோணம்!

திருப்பட்டூர்

பதஞ்சலி

திருச்சி டூ சமயபுரம் டூ சிறுகனூர் பட்டூர் பிரம்மபுரீஸ்வரர் கோவிலில் பதஞ்சலி முனிவர் பிருந்தாவனம் இருக்கிறது.இங்கும் ஓம்சிவசக்திஓம் ஜபித்துவர,விரைவான பலன்கள் கிடைக்கும்.

புலிப்பாணி

திருப்பட்டூரிலிருந்து அரை கி.மீ.தூரத்தில் காசி விஸ்வநாதர் கோவிலில் வியாக்ரபாதர் என்ற புலிப்பாணி ஜீவ பிருந்தாவனம் அமைந்துள்ளது.

திருவெள்ளறை

சிவப்பிரகாச சுவாமி

திருச்சி டூ துறையூர் சாலையில் திருவெள்ளறை இருக்கிறது.இங்கிருக்கும் சிவாலயத்தின் அருகில் சுவாமிகளின் சமாதி அமைந்திருக்கிறது. கார்த்திகை மாதம் வரும் கடைசி திங்கட்கிழமையன்று வருடாந்திர குருபூஜை!

லால்குடி பின்னவாசல்

யோகீஸ்வரர்(எ)ராமகிருஷ்ணசாமி

லால்குடி அருகே பின்னவாசல் கிராமம் இருக்கிறது.இங்கே பல்குனி ஆற்றங்கரையில் சமாதிக்கோவில் அமைந்திருக்கிறது.

தொட்டியம்

நாராயண பிரமேந்திரர்

திருச்சி டூ சேலம் சாலையில் அமைந்துள்ளது தொட்டியம் கிராமம்.இங்கிருந்து 14 கி.மீ.தூரத்தில் காட்டுப்புத்தூர் காவிரி வடகரையில் சமாதிக்கோவில் அமைந்திருக்கிறது.

பெரம்பலூர்

தலையாட்டி சித்தர்
புதிய பஸ்நிலையத்திலிருந்து 2 கி.மீ.தூரத்தில் பிரம்மரிஷி மலைச்சாரலில் மூசாக்கோட்டை ஆசிரமம் அமைந்திருக்கிறது.இந்த ஆசிரமத்தில் ஜீவசமாதிக்கோவில் அமைந்திருக்கிறது.

செந்துறை

மெய்வரத்தம்பிரான்

செந்துறை மடத்துக் கொவிலில்(பழனியாண்டவர் கோவில்) சமாதி இருக்கிறது.

தஞ்சை/திருவாரூர்/நாகை

தஞ்சை கரந்தை

பால்சாமி

கரந்தை பழைய திருவாறு சாலை ராஜாகோரி தாண்டி பால்சுவாமி மடம் வளாகத்தினுள் சமாதி கோவில் இருக்கிறது.சிவலிங்கம் பிரதிஷ்டை செய்யப்பட்டுள்ளது.

தனுத்தாரி பாபா

கரந்தை தமிழ்ச்சங்கக் கட்டிடத்திற்குத் தென்புறம் தனுத்தாரி பாபா மடம் இருக்கிறது.இந்த மடத்தில் தென்மேற்கு மூலையில் பாபாவின் சமாதி இருக்கிறது.

தென்பழனி சத்தியநாராயண சித்தர்

கரந்தை அரசுப்போக்குவரத்துக் கழக பணிமனை தென்புறச் சாலை சித்தர் மண்டபம்இருக்கிறது.இதுவே பழைய சித்தர் ஆஸ்ரமம்.இந்த ஆஸ்ரமத்தின் உட்பகுதியில் சித்தர் சமாதி அடங்கிய சிவலிங்கம் பிரதிஷ்டை செய்யப்பட்டுள்ளது.

ஆதித்த குரு

கரந்தை தமிழ்ச் சங்கத்திற்கு அருகில் சேர்வைக்காரன் தெரு இருக்கிறது.ஆற்றங்கரை சந்தின் நடுவில் ஆதித்தகுரு மடமும் சமாதிக்கோவிலும் உள்ளன.

மன்னார்குடி & விடயபுரம்

சட்டாம்பிள்ளை சுவாமிகள் (எ) இராமசாமி சாமிகள்

கொரடச்சேரி ரயில் நிலையத்திற்குத் தெற்கே வெண்ணவாசல் இருக்கிறது.அங்கிருந்து 3 கி.மீ.தூரத்தில் முசிறியம் என்னும் சிற்றூர் அமைந்திருக்கிறது.அங்கிருந்து 1 கி.மீ.தூரத்தில் விசயபுரம் என்னும் ஊரில்,பிடாரியம்மன் கோவில் இருக்கிறது.இந்தக் கோவிலின் அருகே முத்துச்சாமி பிள்ளை தோட்டத்தின் கிழக்குப் பகுதியில் சட்டாம்பிள்ளை சமாதி மேடை அமைக்கப்பட்டுள்ளது.

வெண்ணவாசல் கொரடாச்சேரி

பாண்டவையாற்றின் அருகே ஸ்ரீவாலையானந்தா ஆஸ்ரமம் இருக்கிறது.இங்கு மகாமேரு கோவிலுக்கு மேற்கே சமாதிபீடம் இருக்கிறது.

திருப்பூந்துருத்தி

தீர்த்த நாராயண சாமி

தஞ்சை டூ திருவையாறு டூ கண்டியூர் சாலையில் 6 கி.மீ.தூரத்தில் மேலைத் திருப்பூந்துருத்தி ஆற்றங்கரையில் சமாதிக்கோவில் இருக்கிறது.இங்கு சிவலிங்கம் பிரதிஷ்டை செய்யப்பட்டுள்ளது.

திருவையாறு

அகப்பேய் சித்தர்

ஐயாரப்பர் கோவிலில் சண்டேசுவரர் சன்னதி பக்கம் மேற்கு நோக்கிய சன்னதியில் சிவலிங்கப் பிரதிஷ்டையுடன் கூடிய சமாதி இருக்கிறது.

தியாகராஜ சுவாமிகள்

சங்கீத மும்மூர்த்திகளில் ஒருவரான இவரது சமாதி காவிரிக்கரையில் இருக்கிறது.சங்கீதத்துறையில் சாதிக்க விரும்புவோர்,இவரது ஜீவ சமாதியை  தொடர்ந்து வெள்ளிக்கிழமைகளுக்கு சுக்கிர ஓரையில்(காலை 6 முதல் 7 வரை;மதியம் 1 முதல் 2 வரை;இரவு 8 முதல் 9 வரை;) வழிபட்டுவரலாம்.

ஆட்கொண்டார் சாமி

திருவையாறு திருநெய்த்தானம் சாலை கல்கி அக்ரஹாரம் என வழங்கப்படுகிறது.சாலையின் வடபுறம் வரிசையில் ஆட்கொண்டார்சாமி கபால மோட்சம் எய்திய சமாதிக்கோவில் இருக்கிறது.

சுடுகாட்டுச்சாமி (எ) சதானந்த சாமிகள்

கல்கி அக்ரஹாரம் 41 ஆம் எண்ணில் சுடுகாட்டு சாமிகளில்ன் திரு மடம் இருக்கிறது.இந்த மடத்தின் முன்பகுதியில் அதிஷ்டானம் இருக்கிறது.

ஸ்ரீதம்பலசாமி

சுடுகாட்டுச்சாமி மடத்தை அடுத்து 42 ஆம் எண் உட்புறமுள்ள கொல்லையில் சமாதி மேடை இருக்கிறது.

ஸ்ரீசிவப்பிரகாச ஆனந்தகிரி சுவாமிகள்

காவிரியின் வடகரையில் தியாகராஜ சுவாமிகள் சமாதிக்குப் பின்புறம் சிறிய சமாதிக்கோவில் இருக்கிறது.இந்த ஜீவசமாதியின் மீது சிவலிங்கம் பிரதிஷ்டை செய்யப்பட்டுள்ளது.

பரமானந்த குரு (எ) அருள்சாமிகள்

திருவையாறு டூ கும்பகோணம் சாலையில் சப்த கன்னியர் கோவில் உள்ளது.அடுத்த கட்டடத்தின் மேற்புறம் சிறிய சந்தில் அருள்குரு பரமானந்த நிலையம் என்னும் சமாதிக்கோவில் இருக்கிறது.வருடாந்திர குருபூஜை விழா பங்குனி மாதம் வரும் சுவாதி நட்சத்திர நாளில் நடைபெற்றுவருகிறது.

சித்தேசர்

ஐயாரப்பர் கோவிலில் ஐயாரப்பர் சன்னதி எதிரில் சித்தேசர் ஆக லிங்கவடிவில் பிரதிஷ்டை செய்யப்பட்டுள்ளது.

சிங்கப்பூர் சாமி(முருகேசன் சாமி)

புஷ்ய மண்டபக்கரை ஓரமாக அறுபத்துமூவர் மடம் இருக்கிறது.இந்த மடத்தினுள் சமாதிக்கோவில் அமைந்திருக்கிறது.

ஆண்டார் சமாதி

மேலமடவிளாகம் ஆதிபராசக்தி வழிபாட்டுமன்றம் இருக்குமிடத்தில் சிறிய கோவிலில் லிங்க வடிவில் சமாதி  இருக்கிறது.

தாராசுரம்

ஒட்டக்கூத்தர்

தாராசுரம் வீரபத்ரன் கோவில் பின்புறம் சமாதி இருக்கிறது.

சுவாமிமலை

சச்சிதானந்த சாமி

சுவாமிமலை வடகரையில் அரசினர் மேல்நிலைப்பள்ளி வளாகத்துக்குள் சமாதிக்கோவில் இருக்கிறது.சமாதி மீது சிலை பிரதிஷ்டை செய்யப்பட்டுள்ளது.

கீழக்கோட்டையூர்

ஸ்ரீராமா சாது

கும்பகோணம் சுவாமி மலையிலிருந்து 3 கி.மீ.தூரத்தில் இருப்பது கீழக்கோட்டையூர் கிராமம் ஆகும்.இங்கிருக்கும் வள்ளலார் கல்வி நிலைய வளாகத்துக்குள் சமாதி இருக்கிறது.வருடாந்திர குருபூஜை விழா பிப்ரவர் 14 !

நரசிம்மபுரம்

ஸ்ரீவண்சடகோப ஸ்ரீநிவாச யதீந்திர மஹா சாமிகள்
சுவாமிமலை அருகில் ஆதனூர் டூ புள்ளபூதங்குடி இடையில் நரசிம்மபுரம் சிற்றூர் இருக்கிறது.இங்கிருக்கும் திருக்குளம் பிருந்தாவன வளாகத்தில் முதலில் இருப்பது சுவாமிகளின் பிருந்தாவனம் ஆகும். இந்த சுற்றுப்புறத்தில் இவருக்குப் பின் பீடமேறிய நான்கு பீடாதிபதிகளின் பிருந்தாவனங்களும் இங்கு இருக்கின்றன.


கும்பகோணம்

திருமழிசை ஆழ்வார்
ஆதி கும்பேஸ்வரர் கோவில் வடக்கில் சாத்தாரத் தெருவின் தென் கடைசியில் திருமழிசைபிரான் திருக்கோவில் இருக்கிறது.இங்கு யோகநிட்டையில் அடங்கிய இடத்தில் மேடையில் திரு உருவபிரதிஷ்டை செய்யப்பட்டுள்ளது.ஓம்சிவசக்திஓம் செய்ய மிகவும் உகந்த இடமாகும்.

கும்பமுனி எனப்படும் அகத்தியர்

ஆதிகும்பேஸ்வரர் கோவிலுக்குள்ளே வெளிப்பிரகாரத்தில் தென்மேற்கு மூலையில் இருக்கும் விநாயகர் சன்னதியின் கீழே அகத்தியர் தவம் செய்து கொண்டிருக்கிறார்.

ஸ்ரீவிஜியீந்திர தீர்த்தர்

159,சோலையப்பன் தெரு அருகில் ஸ்ரீவிஜியீந்திர சுவாமிகள் படித்துறையை ஒட்டி கிழக்குப் பக்கத்தில் சுவாமிகளின் அதிஷ்டானக் கோவில் இருக்கிறது.

மவுனசாமி

ஆதி கும்பேஸ்வரர் கோவில் சற்றுத்தொலைவில் மவுனசாமி மடத்துத் தெருவில் சுவாமிகளின் மடமும் சமாதிக்கோவிலும் இருக்கின்றன.

அருணாச்சல சாமிகள்

மவுனசாமிகள் சமாதிக்கு தெற்குப் பக்கம் சமாதி இருக்கிறது.

ஸ்ரீஅண்ணாசாமிகள்

மடத்துத் தெரு வடகோடியில் காசிவிஸ்வநாதர் கோவில் இருக்கிறது.இந்தக் கோவிலின் வடக்குப் பிரகாரத்தில் துர்க்கைக்கு எதிரில் துளசி மாடமாக சுவாமிகளின் அஸ்தி பீடம் இருக்கிறது.
கருப்பணசாமி, மூட்டைச்சாமி,ராமலிங்கசாமி
ரயில் நிலையம் செல்லும் சாலையின் அருகே திருநாராயணபுரம் வடக்கு வீதி இருக்கிறது.இந்ததெருவின் கடைசியில் திரும்புமிடத்தில் பழைய கருப்பணசாமி மடம் இருக்கிறது. புதிய கதவு எண்:5 இன் பக்கமாக உள்ள சிறிய சந்தின் வழியாக சென்றால் வீட்டின் பின்புறம் சுவாமிகள் மூவரும் சமாதியான இடத்தில் முளைத்த அரசமரமும் மூன்று சிவலிங்கங்கள் பிரதிஷ்டை செய்யப்பட்டிருப்பதையும் காணலாம்.

ராமச்சந்திர தீர்த்தர்

கும்பகோணம் மேலக்காவிரியில் அமரேந்திரபுர அக்ரஹாரம் இருக்கிறது.தற்போது அமரேந்திரபுரத் தெரு என்று பெயரால் அழைக்கப்படுகிறது. அதன் கடைசியில் காவிரிக்கரையில் மூல பிருந்தாவனம் இருக்கிறது.

திருவிசைநல்லூர்

ஸ்ரீதர ஐயாவாள்

கும்பகோணத்திலிருந்து 10 கி.மீ.தூரத்தில் திருவிசை நல்லூர் இருக்கிறது.இங்கு திருமடமும் உற்சவ விக்கிரகமும் உள்ளன.

திருவீழிமலை

ஸ்ரீவீழி சிவவாக்கிய யோகிகள்

கும்பகோணத்திலிருந்து கிழக்கே 20 கி.மீ.தூரத்தில் திருவீழிமலை இருக்கிறது.இங்கிருக்கும் சிவாலயத்தில் கீழவீதியில் திருமடத்தில் யோகிகளின் சமாதிக்கோவில் இருக்கிறது.

திருபுவனம்

விராலிமலை சதாசிவ சாமி

கும்பகோணம் டூ மயிலாடுதுறை சாலையில் 8 கி.மீ.தூரத்தில் திருபுவனம் இருக்கிறது.இங்கு கம்பரேஸ்வரசாமி சிவாலயத்திற்கு அருகே மடமும் சமாதிக்கோவிலும் இருக்கிறது.

ஆடுதுறை

சைதன்ய சிவம்

ஆடுதுறை சூரியனார் கோவில் சாலையில் காவிரியாற்றின் மேம்பாலத்தின் மேற்கே அம்மன் கோவிலுக்கு பின்புறமுள்ள தோப்பில் சைதன்ய விநாயகர் கோவிலில் விநாயகருக்குக் கீழ் இவரது ஜீவசமாதி உயிர்த்துடிப்புடன் இயங்கிவருகிறது.


சாத்தனூர்

திருமூலர்

ஆடுதுறையிலிருந்து 3 கி.மீ.தூரத்தில் சாத்தனூர் இருக்கிறது.இந்த ஊருக்கு வெளியே ஐயனார் கோவில் இருக்கிறது.இந்த அய்யனார் கோவிலின் பின்புறம் திருமூலரின் ஜீவசமாதி இருக்கிறது.ஓம்சிவசக்திஓம் ஜபிக்க ஏற்ற இடமாகும்.

சூரியனார் கோவில்

சிவாக்கிர யோகிகள்

ஆடுதுறை அருகே சூரியனார் கோவில் இருக்கிறது.இங்கிருக்கும் தெற்குவீதியில் திருமடத்தில் சுவாமிகளின் அதிஷ்டானக்கோவில் இருக்கிறது.

கஞ்சனூர்

ஸ்ரீஹரதத்தர்

ஆடுதுறைக்கு வடக்கே 2 கி.மீ.தூரத்தில் கஞ்சனூர் இருக்கிறது.இதன் மேற்கு எல்லையில் மணியாக்குளம் வடகரையில் வடமேற்கு பாகத்தில் அதிஷ்டானக்கோவில் அமைந்திருக்கிறது.

சுயம்பிரகாசர்

கஞ்சனூர் மணியாக்குளம் தென்புறம் காசிவிஸ்வநாதர் கோவில் இருக்கிறது.இங்கு தட்சிணாமூர்த்திக்கு அருகில் உள்ள சந்நிதியில் சிவலிங்கபிரதிஷ்டையுடன் சமாதி இருக்கிறது.அருகில் இரு சீடர்கள் சிவானந்தர் மற்றும் பரமானந்தர் ஆகியோரின் அதிஷ்டானங்களும் இருக்கின்றன.ஆலயத்திற்கு வெளியே தெற்கே தள்ளி ஸ்ரீவைத்தியலிங்க சாமி அதிஷ்டானம் அமைந்திருக்கிறது.


திருநாகேஸ்வரம்

ஸ்ரீநாராயணசாமி சித்தர்

உப்பிலியப்பன் கோவிலுக்கு வடக்கே கீழநடுப்பட்டறை தெருவின் கடைசியில் சமாதி பீடம் இருக்கிறது.மாசி மாதம் வரும் புனர்பூசம் நட்சத்திர் நாளில் வருடாந்திர குருபூஜை!!

கீழக் கபிஸ்தலம்

ஸ்ரீதத்துவராய சுவாமிகள்

கும்பகோணம் டூ திருவையாறு இடையே 15 கி.மீ.தூரத்தில் கீழக்கபிஸ்தலம் இருக்கிறது.இதன் வடக்கே வாழ்க்கை கிராமம் இருக்கிறது.இங்கே சாமியார்தோப்பு என்னும் இடத்தில் அதிஷ்டானம் இருக்கிறது.

குடவாசல்

சுப்பிரமணிய சித்தர்

கும்பகோணம் டூ திருவாரூர் சாலையில் 20 கி.மீ.தூரத்தில் குடவாசல் இருக்கிறது.இங்கே இருக்கும் குருசாமி கோவிலே அதிஷ்டானம் ஆகும்.

திருவிடைமருதூர்

பத்திரகிரியார்

பட்டினத்தாரின் சீடரான இவரது ஜீவசமாதி மகாலிங்கசுவாமி கோவில் கிழக்கு கோபுர வாசலில் சிலை வடிவில் அமைந்திருக்கிறது.

வலங்கைமான்

காரை சித்தர்

வலங்கைமானுக்குக் கிழக்கே குடமுருட்டி ஆற்றின் தென்கரையில் ஆண்டாங்கோவில் என்னும் சிற்றூர் இருக்கிறது.இந்த ஆற்றைக் கடந்தால் காந்தவெளி ஆஞ்சநேயர் கோவில் இருக்கிறது.இந்த கொவிலின் பின்புறம் 250 அடி தூரத்தில் சமாதிக்கோவில் இருக்கிறது.இந்த பீடத்தில் காரை சித்தரின் சுதையாலான உருவம் அமைக்கப்பட்டுள்ளது.ஓம்சிவசக்திஓம் ஜபிக்க ஏற்ற இடம்;ஜபிக்க உகந்த நேரம் அமாவாசை நள்ளிரவு மணி 11.50 முதல் 12.10 வரை!!!

பூனைக்கண் சித்தர்

வலங்கைமான் பாய்க்காரத் தெரு பட்டகுளம் சந்தில் சமாதிக்கோவில் இருக்கிறது.வைகாசி மாதம் வரும் தசமி திதி அன்று வருடாந்திர குருபூஜை வழிபாடு!!!

சின்னகரம்

வலங்கைமானுக்குத் தெற்கே சின்னகரம் என்னும் சிற்றூர் உள்ளது.இதன் தொடக்கத்தில் துரவுபதி அம்மன் கோவில் இருக்கிறது.இந்தக் கோவிலின் பின்புறமுள்ள குளத்த்தின் கரையில் வடமேற்கு மூலையில் சமாதிக்கோவில் இருக்கிறது.

கூந்தலூர்

ரோமரிஷி ஜீவசமாதி இங்கே தான் இருக்கிறது.பஞ்சபட்சி சாஸ்திரம் கற்க விரும்புவோர்,கற்றதை சிறப்பாக செயல்படுத்திட விரும்புவோர்,8 அமாவாசைகளுக்கு இங்கு வந்து இரவு11 முதல் 1 மணி வரை ஓம்சிவசிவஓம் ஜபித்துவரவும்.

திருவாலங்காடு

முதல்வர் நமச்சிவாய மூர்த்தி & திருமாளிகைத் தேவர்

ஆடுதுறை டூ குத்தாலம் இடையே திருவாலங்காடு இருக்கிறது.இங்கு திருவாடுதுறை ஆதினத்திருமடத்தில் ஆதீனகுரு முதல்வர் நமச்சிவாய மூர்த்திகள் சமாதிக்கோவில் இருக்கிறது.இந்த வளாகத்துக்குள் சற்று வடபுறம் திருமாளிகைத் தேவர் சன்னதி இருக்கிறது.இவருக்கு தைமாதம் வரும் அசுபதி நட்சத்திரநாளில் வருடாந்திர வழிபாட்டு நாள்!!!

முழையூர்

ஆதிசிவப்பிரகாசர்

தாராசுரத்தை அடுத்து முழையூர் முக்கூட்டிற்கு மேற்கே ஆதிசிவப்பிரகாசர் சிவாலயம் இருக்கிறது.இதன் கருவறையே சமாதிக்கோவில் ஆகும்.

கொத்தம்பட்டி

பாலானந்த ஜோதி சுவாமிகள்

தஞ்சாவூர் டூ புதுக்கோட்டை இடையே 13 கி.மீ.தூரத்தில் புனல்குளம் இருக்கிறது.இதன் வடக்கே 4 கி.மீ.தூரத்தில் இருப்பது கொத்தம்பட்டி.சாலையின் முடிவில் பிள்ளையார் கோவில் இருக்கிறது.இதன் வடபுறம் காமாட்சியம்மன் கோவில் இருக்கிறது.இந்த கோவில் வளாகத்துக்குள் அம்மன் சன்னதியின் தெற்கே சமாதிக்கோவில் இருக்கிறது.இங்கே சிவலிங்கம் பிரதிஷ்டை செய்யப்பட்டுள்ளது.

பட்டுக்கோட்டை

ஸ்ரீவெங்கிடு சாமிகள்

பட்டுக்கோட்டை பெரியகடை தெரு மேல்கோடியில் சாமியார் மடம் என்னும் ஸ்ரீவெங்கிடு சுப்பையா சாமிகளின் அழகிய சமாதிக்கோவில் இருக்கிறது.இங்கே சிவலிங்கம் பிரதிஷ்டை செய்யப்பட்டுள்ளது.

வடகாடு

ஸ்ரீஅம்பலவாண சுவாமிகள்

முத்துப்பேட்டை ஜாம்பவான் ஓடை ஊரிலிருந்து தில்லை வளாகம் செல்லும் சாலையில் வடகாடு என்னும் ஊரில் சுவாமிகளின் சமாதிக்கோவில் இருக்கிறது.மாசி மாதம் வரும் திருவாதிரை நட்சத்தன்று வருடாந்திர வழிபாடு!!!

முத்துப்பேட்டை

ஷைகு தாவுத் வலி

ஜாம்பவான் ஓடை பகுதியில் ஷைகு தாவுத்வலி தர்கா இருக்கிறது.

மன்னார்குடி

சூட்டுக்கோல் ராமலிங்கசாமி
மன்னார்குடி கிழக்கு எல்லையில் திருவாரூர் செல்லும் சாலையில் மேல்புறம் பைபாஸ் ரோடு ஐயர் சமாதி என்றழைக்கப்படும் சூட்டுக்கோல் ராமலிங்க சாமிகளின் ஜீவசமாதி இருக்கிறது.இங்கே சிவலிங்கம் பிரதிஷ்டை செய்யப்பட்டுள்ளது.வருடாந்திர தைப்பூசம் தோறும் குருபூஜை!

மாயாண்டி சாமி

சூட்டுக்கோல் ராமலிங்க சாமியின் சமாதி பின்புறம் மாயாண்டி சாமியின் சமாதி இருக்கிறது.

ஸ்ரீவாட்டார் மவுனகுரு சாமி

மன்னார்குடி தென்வடல் 6 ஆம் தெருவில் கோபிநாதப்பெருமாள் கோவில் அருகில் சமாதிக்கோவில் இருக்கிறது.

ஸ்ரீமேரு சாமி

மன்னார்குடி ஹரித்ரா நதி தெப்பக்குளம் டூ ஈசானியேஸ்வரர் என்னும் காசி விஸ்வநாதர் ஆலயத்தின் கிழக்கு வாசலை அடுத்து,வாசலுக்கு வடபுறம் பாமினி ஆற்றுக்குத் தென்புறம் மேருசாமி சமாதிக்கோவில் இருக்கிறது.

பூந்தி சுவாமிகள்

மேலே குறிப்பிட்டுள்ள சிவன்கோவில் அருகில் சுவாமிகளின் சமாதி இருக்கிறது.

வடகரவாயில்

சாமிநாத சித்தன்

மன்னார்குடிக்கு 10 கி.மீ.தூரத்தில் ராஜப்பையன் சாவடி என்னும் சிற்றூர் இருக்கிறது.அதன் அருகில் வடகரவாயில் என்னும் கிராமம் இருக்கிறது.இங்கே இருக்கும் நாகமாரியம்மன் கோவிலுக்கு எதிர்ப்புறம் அதிஷ்டானம் அமைந்திருக்கிறது.மாசிமாதம் வரும் உத்ராடம் நட்சத்திர நாளன்று வருடாந்திர குருபூஜை விழா !!!
அருகிலேயே குருநாதர் ஆறுமுக சித்தரின் சமாதி இருக்கிறது.இங்கே பங்குனி மாத பவுர்ணமியன்று வருடாந்திர குருபூஜை!!!

முத்தையா சித்தர்

ராஜப்பையன் சாவடி அருகில் வடகரைவாயில் நாகமாரியம்மன் கோவில் வடக்குப் பக்கத்தில் சமாதி இருக்கிறது.மாசி மாதம் வரும் உத்திராடம் நட்சத்திரத்தன்று குருபூஜை விழா நடைபெற்றுவருகிறது.

செருவாமணி

ஆனந்தசாமி

சூட்டுக்கோல் ராமலிங்கசாமியின் சீடர் இவர்.மன்னார்குடியிலிருந்து 15 கி.மீ.தூரத்திலுள்ள சேந்தமங்கலத்தில் இறங்கி செருவாமணியை அடையலாம்.இங்கே இவரது ஜீவசமாதி இருக்கிறது.

திருக்களர்

வீரசேகர ஞான தேசிகர்


மன்னார்குடி அருகில் திருப்பத்தூர் என்னும் சிற்றூர் இருக்கிறது.இதன் அருகில் திருக்களர் பாரிஜாதவனேஸ்வரர் கோவில் வடக்கு வீதியில் வடகிழக்கு மூலையில் சமாதிக்கோவில் இருக்கிறது.வைகாசி மாதம் வரும் பவுர்ணமியன்று குருபூஜை நடைபெற்றுக்கொண்டிருக்கிறது.

மருதூர்

சிவப்பிரகாச சாமிகள்

மன்னார்குடி டூ திருத்துறைப்பூண்டி சாலையில் 7 கி.மீ.தூரத்தில் தட்டாங்கோவில் இருக்கிறது.இதன் தெற்கே 3 கி.மீ.தூரத்தில் மருதூர் இருக்கிறது.இங்கே ஸ்ரீசிவப்பிரகாச சாமிகள் அதிஷ்டானம் அமைந்திருக்கிறது.இங்கே வருடாந்திர குருபூஜை கார்த்திகை மாதம் வரும் திருஓணம் நட்சத்திரத்தன்று நடைபெற்றுவருகிறது.

திருநெல்லிகாவல்புதூர்

ஸ்ரீஅண்ணன் சாமிகள்(எ)அருணாச்சல சாமிகள்

திருத்துறைப்பூண்டி டூ திருவாரூர் சாலை நான்கு ரோடு சந்திப்புக்கு மேற்கே 3 கி.மீ.தூரத்தில் புதூர் ரைஸ் மில்லுக்கு எதிரில் உள்ள தோப்பில் சுவாமிகளின் அதிஷ்டானம் அமைந்திருக்கிறது.

நன்னிலம்

தாண்டவராய சுவாமி & நாராயணசுவாமி

நன்னிலம் கடைத்தெரு அருகே பிள்ளையார் கோவில் தெற்கு தெரு இலுப்பைத் தோப்பு இருக்கிறது.இங்கே ஸ்ரீநாராயண தாண்டீஸ்வரர் ஜீவசமாதி இருக்கிறது.அருகருகே தென்புறத்தில் ஸ்ரீநாராயணகுரு அதிஷ்டானம் அமைந்திருக்கிறது.வடபுறம் ஸ்ரீதாண்டவராய சுவாமிகளின் அதிஷ்டானம் இருக்கிறது.வைகாசி மாதம் வரும் விசாகத்தன்று குருபூஜை வருடம் தோறும் நடைபெற்றுவருகிறது.

சன்னாநல்லூர்
சின்னான் சுவாமி
திருவாரூர் டூ மயிலாடுதுறை சாலையில் சன்னாநல்லூரில் சமாதிக்கோவில் இருக்கிறது.வருடம் தோறும் வரும் ஆடிமாதம் ஆயில்யம் நட்சத்திரநாளில் குருபூஜைவிழா நடைபெற்றுக்கொண்டிருக்கிறது.

திருவாஞ்சியம்
ராமையா சாமி
நன்னிலத்திலிருந்து 7 கி.மீ.தூரத்தில் திருவாஞ்சியம் அருகில் பால்பண்ணைச்சேரி கிராமம் இருக்கிறது.இங்கு பாலதண்டாயுதபாணிகோவில் வளாகத்தில் இவரது ஜீவசமாதி இருக்கிறது.ஒவ்வொரு ஆண்டும் பங்குனி 2 ஆம் தேதி வருடாந்திர குருபூஜை விழா!

திருவாரூர்
கமலமுனி
திருவாரூர் ஆனந்தீஸ்வரர் சன்னதியில் சித்திபெற்றுள்ளார்.



மடப்புரம் தட்சிணாமூர்த்தி
திருவாரூர் மடப்புரம் பகுதியில் கமலாலய தெப்பக்குளத்திற்குத் தென்மேற்கே அம்மையப்பன் செல்லும் சாலையில் சமாதிக்கோவில் அமைந்திருக்கிறது.இங்கே இருக்கும் சிவலிங்கத்தின் கீழே சுரங்கக் குகையில் அடக்கமாகியிருக்கிறார்.


No comments:

Post a Comment